sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

அயல் பணி பேராசிரியர்களை திரும்ப பெற முடிவு

/

அயல் பணி பேராசிரியர்களை திரும்ப பெற முடிவு

அயல் பணி பேராசிரியர்களை திரும்ப பெற முடிவு

அயல் பணி பேராசிரியர்களை திரும்ப பெற முடிவு


UPDATED : செப் 20, 2025 12:00 AM

ADDED : செப் 20, 2025 09:31 AM

Google News

UPDATED : செப் 20, 2025 12:00 AM ADDED : செப் 20, 2025 09:31 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:
'புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகளில், ஓய்வு பெறும் வயதை நெருங்கியவர்களுக்கு வழங்கப்பட்ட, அயல் பணியை திரும்பப் பெற' உயர்கல்வித்துறை முடிவு செய்துள்ளது.

தமிழகத்தில் நடப்பாண்டு, புதிதாக 15 கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகள் திறக்கப்பட்டன. இக்கல்லுாரிகளுக்கு, ஒரு கல்லுாரிக்கு 12 பேராசிரியர்கள் வீதம், 180 பேராசிரியர்கள் நியமிக்க, அரசு ஒப்புதல் அளித்தது.

ஆனால், புதிய உதவி பேராசிரியர்கள் தேர்வு நடவடிக்கை முடங்கி கிடப்பதால், அருகில் உள்ள மாவட்டங்களில் பணியாற்றும் பேராசிரியர்கள், அயல் பணியாக புதிய கல்லுாரிகளில் பணி அமர்த்தப்பட்டனர். இதற்கு, பேராசிரியர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

ஏற்கனவே, அயல் பணியில் சென்றவர்கள், ஓய்வு பெறும் வயதை நெருங்குவோர் போன்றோரை, தொடர்ந்து அயல் பணியில் ஈடுபடுத்துவதாக குற்றச்சாட்டு எழுந்தது.

அதைத் தொடர்ந்து, புதிய அரசு கலை, அறிவியல் கல்லுாரிகளில், அயல் பணியில் ஈடுபடுத்தப் பட்ட பேராசிரியர்களில், ஓய்வு பெறும் வயதை நெருங்குவோரை, மீண்டும் அவர்கள் பணியாற்றிய கல்லுாரிகளுக்கே மாற்ற, நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக, உயர்கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us