UPDATED : பிப் 10, 2026 12:58 PM
ADDED : பிப் 10, 2026 01:00 PM

பீளமேடு:
நவ இந்தியா பகுதியில் செயல்படும் இந்துஸ்தான் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில், 27வது விளையாட்டு தின விழா கொண்டாடப்பட்டது. பீளமேடு போலீஸ் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர் அர்ஜுன் குமார் பங்கேற்றனர்.
அவர் பேசுகையில், “வாழ்க்கையின் மிக முக்கியமான, இந்த மாணவ பருவத்தில் நிறைய விஷயங்களைக் கற்றுக்கொள்ள வேண்டும். விளையாட்டில் வெற்றி தோல்வி இருப்பதை போல வாழ்விலும் பல ஏற்ற இறக்கம் வரும். எல்லாவற்றையும் எதிர்கொள்ளும் மனப்பக்குவத்தை மாணவர்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும்,” என்றார்.
கம்பம் ஏறுதல், கயிற்றின் மீது நடத்தல், அணிவகுப்பு மற்றும் பல்வேறு தடகளப்போட்டிகள் நடந்தன. இந்துஸ்தான் கல்வி நிறுவனங்களின் செயலர் சரஸ்வதி, நிர்வாக செயலர் பிரியா அறங்காவலர் யமுனா, முதல்வர் செண்பகவல்லி, உடற்கல்வி இயக்குநர் சாலமன், ஆசிரியர்கள் பங்கேற்றனர்.

