UPDATED : மார் 31, 2025 12:00 AM
ADDED : மார் 31, 2025 09:09 AM
புதுச்சேரி:
தினமலர் வழிகாட்டி நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பெற்றோர்கள் இந்நிகழ்ச்சி மூலம் உயர்படிப்பு குறித்த பல தகவல்கள் தெரிந்து கொண்டதாக பாராட்டினர்.
சத்யா செந்தில்குமார், விருத்தாசலம்:
பல ஆண்டுகளாக தினமலர் நாளிதழ் படித்து வருகிறோம். அதில் இருந்த விளம்பரத்தை பார்த்து தான் இந்த வழிகாட்டி நிகழ்ச்சிக்கு வந்தோம். இங்கு, வந்தபிறகு, என் மகனை என்ன படிக்க வைக்கலாம், அதிலுள்ள வேலை வாய்ப்புகள் குறித்த தகவல்கள் தெரிந்து கொள்ள முடிந்தது.
தௌிவு பெற்றோம்
அசோக் குமார், விருத்தாசலம்:
வழிகாட்டி நிகழ்ச்சிக்கு, எனது மகளை அழைத்து வந்துள்ளேன். இங்கு வந்ததால் எந்த பாடப்பிரிவு எடுத்து படித்தால், வேலை வாய்ப்பு உள்ளது என்ற தெளிவு கிடைத்துள்ளது. மேலும், பல்வேறு கல்லுாரிகளின் அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளதால், அங்குள்ள பாடப்பிரிவுகளை பற்றியும் அறிவிந்து கொள்ள முடிந்தது.
தினமலருக்கு நன்றி
வெற்றிவேலன்,புதுச்சேரி:
தினமலர் நாளிதழில், வழிகாட்டி தொடர்பான விளம்பரத்தை பார்த்தவுடன், கம்பெனிக்கு விடுமுறை போட்டுவிட்டு, எனது மகளுடன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டேன். இந்நிகழ்ச்சி மிகவும் பயனுள்ளதாக இருந்தது. என் மகளை என்ன படிக்க வைக்கலாம் என்ற தெளிவு கிடைத்துள்ளது. மாணவர்களின் நலனில் அக்கறை கொண்டு, ஆண்டுதோறும் தவறாமல் வழிகாட்டி நிகழ்ச்சியை நடத்தி வரும் தினமலருக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.