sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

தினமலர் வழிகாட்டி...: புதுச்சேரியில் இன்று துவக்கம்

/

தினமலர் வழிகாட்டி...: புதுச்சேரியில் இன்று துவக்கம்

தினமலர் வழிகாட்டி...: புதுச்சேரியில் இன்று துவக்கம்

தினமலர் வழிகாட்டி...: புதுச்சேரியில் இன்று துவக்கம்


UPDATED : மார் 29, 2025 12:00 AM

ADDED : மார் 29, 2025 05:57 PM

Google News

UPDATED : மார் 29, 2025 12:00 AM ADDED : மார் 29, 2025 05:57 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி:
தினமலர் நாளிதழ் வழங்கும் வழிகாட்டி நிகழ்ச்சி புதுச்சேரியில் இன்று துவங்கியது.

என்ன படிக்கலாம்


பிளஸ் 2க்கு பிறகு என்ன படிக்கலாம், எங்கு படிக்கலாம் எனும் கேள்விகளோடு காத்திருக்கும் மாணவர்களுக்கு வழிகாட்டும் இந்த மெகா கல்வி திருவிழாவில், கல்வி ஆலோசகர்கள், நிபுணர்கள், தொழில் துறை வல்லுநர்கள் சிறந்த ஆலோசனைகள் வழங்குகின்றனர்.

மாணவர்களின் சிறந்த உயர் கல்விக்கு அடித்தளமிடும் இந்நிகழ்ச்சியில் எதிர்காலத்தை ஆளப்போகும் துறைகள், உடனடி வேலை வழங்கும் படிப்புகள் எவை என்பது உள்ளிட்ட அனைத்து கேள்விகளுக்கும் விடை கிடைக்கும்.

அட்மிஷன் நடைமுறை


உயர்கல்வி நிறுவனங்களில் அட்மிஷன் நடைபெறுவது எப்படி, எழுத வேண்டிய நுழைவுத் தேர்வுகள், வேலை வாய்ப்பினை அள்ளித் தரும் துறைகள் குறித்து இந்நிகழ்ச்சியில் விளக்கப்படும்.

மாணவர்கள் வளர்த்துக்கொள்ள வேண்டிய திறன்கள், உதவித்தொகை வாய்ப்புகள் உள்ளிட்ட அனைத்துவித சந்தேகங்களுக்கும் தீர்வு கிடைக்கும்.

நிபுணர்கள் ஆலோசனை



சிவில் சர்வீசஸ், கலை அறிவியல், சட்டம், மருத்துவம், இன்ஜினியரிங், டிசைன், ஆர்க்கிடெக்சர், கம்ப்யூட்டர் சயின்ஸ், ஆர்டிபிஷியல் இன்டெலிஜென்ஸ், மிஷின் லேர்னிங், டீப் லேர்னிங், சைபர் செக்யூரிட்டி என பல்வேறு துறைகள் குறித்து துறை சார்ந்த வல்லுநர்கள் நேரடியாக ஆலோசனை வழங்குகின்றனர்.

மெட்டாவர்ஸ், டேட்டா சயின்ஸ், ஏ.ஆர்.வி.ஆர். அறிவியல் தொழில்நுட்பம், ஸ்டார்ட் ஆப் வாய்ப்புகள் உள்ளிட்ட துறைகளில் சாதிக்க வழிகாட்டுதல்கள் கிடைக்கும்.

நுழைவு தேர்வு



மேலும், நீட் மற்றும் ஜே.இ.இ., போன்ற தேசிய நுழைவு தேர்வுகளில் சாதிப்பதற்கான வழிமுறைகள், கிளாட், நாட்டா, கேட் போன்ற நுழைவு தேர்வுகளின் முக்கியத்துவம் மற்றும் புதுச்சேரி சென்டாக் மாணவர் சேர்க்கை குறித்து விளக்கப்படும்.

அனைத்து பிரிவு மாணவர்களுக்கான உதவித்தொகை வாய்ப்புகள், ஐ.ஐ.டி.,; என்.ஐ.டி.,; ஐ.ஐ.எஸ்.சி.,; ஐ.சி.டி., எய்ம்ஸ், ஜிப்மர், ஐ.எஸ்.ஐ., ஐ.ஐ.எஸ்.இ.ஆர்., போன்ற தேசிய முக்கியத்துவம் வாய்ந்த கல்வி நிறுவனங்களில் சேர்க்கை பெறுவதற்கான வழிமுறைகள் குறித்தும் விளக்கம் அளிக்கப்படுகிறது.

அரங்கங்கள்


நிகழ்ச்சியில் பொறியியல், கலை, மேலாண்மை, கட்டடக் கலை, கம்ப்யூட்டர் சயின்ஸ், ஐ.டி., சட்டம் உள்ளிட்ட அனைத்து துறை சார்ந்த கல்லுாரி மற்றும் பல்கலைகளின் 50க்கும் மேற்பட்ட ஸ்டால்கள் இடம் பெறுகின்றன. பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்பு மாணவ மாணவியர், பெற்றோர் இலவசமாக பங்கேற்கலாம்.

அசத்தலான பரிசுகள்


கருத்தரங்க அமர்வுகளில், மாணவர்களிடம் கேள்விகள் கேட்கப்படும். பதில் அளிப்பவர்களுக்கு லேப்டாப், டேப்லெட், வாட்ச் என அசத்தலான பரிசுகள் வழங்கப்படும்.

எதிர்கால படிப்புகள்


ஏ.ஐ. எனப்படும் செயற்கை நுண்ணறிவு உலகை ஆளப் போகிறது. இதன் முக்கியத்துவம் குறித்தும் கருத்தரங்கில் விளக்கப்பட உள்ளது.

நீங்களும் விஞ்ஞானி ஆகலாம் எனும் தலைப்பில் ராணுவ விஞ்ஞானி தில்லிபாபு, நவீன தொழில்நுட்பங்களின் எதிர்காலம் குறித்து கல்வி ஆலோசகர் ஜெயபிரகாஷ் காந்தி, நீட், ஜே.இ.இ., நுழைவு தேர்வில் சாதிப்பதற்கான வழிமுறைகள் குறித்து அஸ்வின், வேலைவாய்ப்புகள் குறித்து சோகோ மனிதவள மேம்பாட்டு அதிகாரி சார்லஸ் காட்வின் ஆகியோர் விளக்கம் அளிக்கிறார்கள்.

கேன்டீன் வசதி


மாணவர் மற்றும் பெற்றோர் வசதிக்காக அரங்கில் கேன்டீன் வசதியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இணைந்து வழங்குவோர்



நிகழ்ச்சியை தினமலர் நாளிதழுடன் கோவை ராமகிருஷ்ணா எஜூகேஷன் இன்ஸ்டிடியூஷன், அமிர்தா விஷ்வ வித்யாபீடம், ராஜலட்சுமி இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, தி இன்ஸ்டிடியூட் ஆப் சார்ட் அக்கவுண்ட் ஆப் இந்தியா, ருசி பால் நிறுவனம், எஸ். மீடியா சேனல், அக்குவாகிரீன் குடிநீர், 92.7 பிக் எப்.எம். ஆகியவை இணைந்து வழங்குகின்றன. இலவச முன்பதிவிற்கு தினமலர் வழிகாட்டி நிகழ்ச்சியில் தினமும் காலை மற்றும் மாலையில் கருத்தரங்கம் நடக்கிறது. இதில் பங்கேற்க 9566777833 என்ற வாட்ஸ் ஆப் எண்ணில் RGN என்று டைப் செய்து பதிவு செய்யலாம்.

சென்டாக் அதிகாரிகள் விளக்கம்


புதுச்சேரியில் மையப்படுத்தப்பட்ட உயர் கல்வி மாணவர் சேர்க்கை அமைப்பாக சென்டாக் உள்ளது. புதுச்சேரியில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் கல்லுாரிகளில் மருத்துவம், இன்ஜினியரிங், கலை அறிவியல், வணிகவியல், துணை மருத்துவ படிப்புகள் அனைத்தும் சென்டாக் மூலம் மட்டுமே சேர்க்கை நடத்தப்பட்டு வருகிறது.இன்று (29ம் தேதி) மாலை 3:00 மணியளவில் நடக்கும் சிறப்பு அமர்வில் சென்டாக்கில் விண்ணப்பிப்பது, கவுன்சிலிங் நடைமுறைகள், இட ஒதுக்கீடு, மாநிலத்தில் உள்ள படிப்புகள் என அனைத்து சந்தேகங்களுக்கும் விளக்கம் அளிக்கப்படுகிறது.புதுச்சேரி இந்திரா கலை அறிவியல் கல்லுாரி உதவி பேராசிரியரும் சென்டாக் தொழில்நுட்ப ஒருங்கிணைப்பாளர் யமுனாராணி, வில்லியனுார் கஸ்துார்ப மகளிர் கல்லுாரி உதவி பேராசிரியரும் சென்டாக் குறை தீர்வு அதிகாரியுமான விவேகானந்ததாசன் ஆகியோர் விளக்க அளிக்க உள்ளனர்.சென்டாக் கவுன்சிலிங் குறித்த அனைத்து சந்தேகங்களுக்கு ஒரே குடையின் கீழ் விளக்கம் பெற இதைவிட சிறந்த வாய்ப்பு வேறு எங்கும் கிடைக்காது. புதுச்சேரி மாணவ மாணவிகளே மிஸ் பண்ணாம பெற்றோர்களுடன் வந்துடுங்க...


இன்றைய அமர்வில் பேச்சாளர்கள்


துவக்க நிகழ்ச்சிக்கு பிறகு இன்று காலை 10:00 மணிக்கு துவங்கிய முதல் அமர்வில் ஸ்ரீகிருஷ்ணா இன்ஸ்டிடியூஷன்ஸ் பேராசிரியர் பென்ரூபன், கோர் இன்ஜினியரிங் படிப்புகள் பற்றியும், மத்திய டி.ஆர்.டி.ஓ., ராணுவ விஞ்ஞானி டில்லிபாபு, நீங்களும் விஞ்ஞானி ஆகலாம் என்ற தலைப்பில் பேசினார்.ஆடிட்டர் சந்தியா எதிர்கால சி.ஏ., வணிகவியல் படிப்புகளில் வாய்ப்புகள் குறித்தும், கோவை ராமகிருஷ்ணா இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி உதவி பேராசிரியர் ஆனந்தகுமார், புதிய தொழில்நுட்ப படிப்புகள் குறித்து விளக்கினர்.மாலை 3:00 மணிக்கு துவங்கிய சென்டாக் படிப்புகள், அட்மிஷன் குறித்த சந்தேகங்களுக்கு கல்வியாளர்கள் விளக்கம் அளித்தனர். சென்னை சோகோ நிறுவன முதன்மை மனித வள மேம்பாட்டு அதிகாரி சார்லஸ் காட்வின் வேலைவாய்ப்பு திறன்கள் பற்றியும், பிரபல கல்வியாளர் ரமேஷ்பிரபா உடனடி வேலை அளிக்கும் படிப்புகள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டன.






      Dinamalar
      Follow us