sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 07, 2026 ,மாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

அரசு நடுநிலைப் பள்ளியில் பேரிடர் மேலாண்மை பயிற்சி

/

அரசு நடுநிலைப் பள்ளியில் பேரிடர் மேலாண்மை பயிற்சி

அரசு நடுநிலைப் பள்ளியில் பேரிடர் மேலாண்மை பயிற்சி

அரசு நடுநிலைப் பள்ளியில் பேரிடர் மேலாண்மை பயிற்சி


UPDATED : மார் 07, 2026 01:08 PM

ADDED : மார் 07, 2026 01:09 PM

Google News

UPDATED : மார் 07, 2026 01:08 PM ADDED : மார் 07, 2026 01:09 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரவக்குறிச்சி:
அரவக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், பேரிடர் மேலாண்மை தொடர்பான விழிப்புணர்வு மற்றும் பயிற்சி நடைபெற்றது.

தலைமை ஆசிரியர் சாகுல் அமீது வரவேற்றார். அரவக்குறிச்சி தீயணைப்பு மற்றும் மீட்புத்துறை அலுவலர் ராதாகிருஷ்ணன், மாணவர்களுக்கு பேரிடர் மேலாண்மை குறித்து பயிற்சி அளித்து பேசுகையில், தீ விபத்து ஏற்படும் காரணங்கள், அவற்றை தடுக்கும் முறைகள் குறித்து விளக்கினார்.எல்.பி.ஜி., சிலிண்டரை எப்போதும் நேராக நின்ற நிலையில் வைத்திருக்க வேண்டும், வாயு வாசனை தெரிந்தால் உடனடியாக ஜன்னல் மற்றும் கதவுகளை திறந்து பெரியவர்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும், என அறிவுறுத்தினார்.

தீ விபத்து உள்ளிட்ட அவசர நிலைகளில் தொடர்பு கொள்ள வேண்டிய அவசர உதவி எண் 112 மற்றும் அரவக்குறிச்சி தீயணைப்பு நிலைய தொலைபேசி எண் 04320 - 230071 ஆகியவற்றையும் மாணவர்களுக்கு தெரிவிக்கப்பட்டது. 6, 7, 8ம் வகுப்பு மாணவர்களுக்கு வினாடி வினா போட்டி நடத்தப்பட்டு, வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியை மகிழ்முற்ற செயலர் ஷகிலா பானு ஒருங்கிணைத்து நன்றி கூறினார்.






      Dinamalar
      Follow us