இன்ஜி., கல்லுாரி கிரிக்கெட் எஸ்.எஸ்.என்., அணி சாம்பியன்
இன்ஜி., கல்லுாரி கிரிக்கெட் எஸ்.எஸ்.என்., அணி சாம்பியன்
UPDATED : மார் 07, 2026 01:07 PM
ADDED : மார் 07, 2026 01:08 PM
சென்னை:
பொறியியல் கல்லுாரிகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டியில், எஸ்.எஸ்.என்., பொறியியல் கல்லுாரி அணி, சாம்பியன் கோப்பையை வென்றது.
ஆர்.எம்.கே., தொழில்நுட்ப கல்லுாரி சார்பில், மஞ்சுளா முனிரத்தினம் நினைவு கோப்பைக்கான கிரிக்கெட் போட்டிகள், திருவள்ளூர் மாவட்டம், கவரைப்பேட்டையில் உள்ள கல்லுாரி வளாகத்தில் நடந்தன. இதில், 16 பொறியியல் கல்லுாரி அணிகள் பங்கேற்றன. இறுதிப்போட்டிக்கு ஆர்.எம்.கே., பொறியியல் மற்றும் எஸ்.எஸ்.என்., பொறியியல் கல்லுாரி அணிகள் தகுதி பெற்றன. நேற்று நடந்த இறுதிப் போட்டியில், டாஸ் வென்ற ஆர்.எம்.கே., அணி முதலில் பேட் செய்து, 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 130 ரன்கள் எடுத்தது.
எளிதான இலக்கை நோக்கி களமிறங்கிய எஸ்.எஸ்.என்., அணி, 17 ஓவர்களில் 1 விக்கெட் மட்டுமே இழந்து, 132 ரன்கள் குவித்து, 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்று, 'சாம்பியன்' கோப்பையை கைப்பற்றியது.
வெற்றி பெற்ற அணிகளுக்கு ஆர்.எம்.கே., கல்வி குழுமத்தின் தலைவர் ஆர்.எஸ்.முனிரத்தினம், இயக்குநர் ஜோதி நாயுடு ஆகியோர் பரிசுகளை வழங்கினர்.

