sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

முதல் பருவத்துக்கான பாட புத்தகங்கள் அனுப்பும் பணி கரூரில் துவக்கம்

/

முதல் பருவத்துக்கான பாட புத்தகங்கள் அனுப்பும் பணி கரூரில் துவக்கம்

முதல் பருவத்துக்கான பாட புத்தகங்கள் அனுப்பும் பணி கரூரில் துவக்கம்

முதல் பருவத்துக்கான பாட புத்தகங்கள் அனுப்பும் பணி கரூரில் துவக்கம்


UPDATED : மே 27, 2024 12:00 AM

ADDED : மே 27, 2024 10:49 AM

Google News

UPDATED : மே 27, 2024 12:00 AM ADDED : மே 27, 2024 10:49 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்:
கரூரில் இருந்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு, பாட புத்தகங்கள் அனுப்பும் பணி தொடங்கியது.

தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவியர்களுக்கு, பாட புத்தகங்கள், நோட்டு புத்தகங்கள் உள்ளிட்ட, 16 வகையான பொருட்கள் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது.

கோடை விடுமுறை முடிந்து வரும், ஜூன் மாதம் முதல் வாரத்தில் பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. பள்ளிகள் திறந்த நாளே மாணவ, மாணவியருக்கு புத்தகங்கள் வழங்கப்படும் என, தமிழக பள்ளிக்கல்வித் துறை தெரிவித்துள்ளது.

இதையடுத்து, 2024-25ம் கல்வியாண்டுக்கான முதல் பருவத்துக்கான பாடபுத்தகங்கள் அனுப்பும் பணி தொடங்கியுள்ளது. கரூர் மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் உள்ள குடோனில் இருந்து, முதலாம் வகுப்பு முதல், ஐந்தாம் வகுப்பு வரை, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும், 40 ஆயிரம் மாணவ, மாணவியர்களுக்கு பாட புத்தகங்கள் அனுப்பும் பணி துவங்கியது.

கரூர் மாவட்டத்தில் உள்ள, எட்டு வட்டார கல்வி அலுவலகங்களுக்கு லாரி, வேன் மூலம் பாட புத்தகங்கள் அனுப்பி வைக்கப்படும். பிறகு, அங்கிருந்து அந்தந்த பள்ளி களுக்கு பாட புத்தங்கங்கள் அனுப்பி வைக்கப்படும் என, பள்ளிக்கல்வி துறை ஊழி யர்கள் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us