UPDATED : ஜன 19, 2026 10:17 AM
ADDED : ஜன 19, 2026 10:18 AM
திருப்பூர்:
போக்குவரத்து ஆர்.டி.ஓ., போன்ற தோற்றத்தில் புகைப்படம் வைத்தும், 'நீங்கள் வாகனம் ஓட்டும்போது விதிமீறல்களில் ஈடுபட்டிருக்கிறீர்கள், உங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது' என்பது போன்ற தகவலுடனும், 'சலான் கட்ட வேண்டும்' என்று ஏ.பி.கே. பைல்கள் வாட்ஸாப் மூலம் அனுப்பப்படுகின்றன.
'தவறு செய்து விட்டோமோ' என்ற பதற்றத்தில் அந்த ஏ.பி.கே., இணைப்பை தொடுவதால் நமது கணக்கு முழுதும் ஹேக் செய்யப்பட்டு அனுப்பியவர் கட்டுக்குள் சென்றுவிடும்.
எக்காரணம் கொண்டும் ஏ.பி.கே., பைல்களை பதிவிறக்கம் செய்யக்கூடாது. தெரிந்தவரிடமிருந்து வந்தாலும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அவர்களின் வாட்ஸாப் கணக்கும் ஹேக் செய்யப்பட்டிருக்கலாம்.
திருப்பூர் மற்றும் கோவையில் தற்போது இதுபோன்ற மோசடி அதிகம் நடப்பதால் பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.

