sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

கன்னடம் எழுத தெரியாதா? சிவராஜ் தங்கடகி ஆவேசம்!

/

கன்னடம் எழுத தெரியாதா? சிவராஜ் தங்கடகி ஆவேசம்!

கன்னடம் எழுத தெரியாதா? சிவராஜ் தங்கடகி ஆவேசம்!

கன்னடம் எழுத தெரியாதா? சிவராஜ் தங்கடகி ஆவேசம்!


UPDATED : பிப் 08, 2025 12:00 AM

ADDED : பிப் 08, 2025 06:06 PM

Google News

UPDATED : பிப் 08, 2025 12:00 AM ADDED : பிப் 08, 2025 06:06 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கொப்பால்:
பி.எஸ்சி., படித்த எனக்கு கன்னடம் எழுத தெரியாதா என்று, அமைச்சர் சிவராஜ் தங்கடகி ஆவேசமாக கூறினார்.

கன்னடம் மற்றும் கலாசார அமைச்சர் சிவராஜ் தங்கடகி. இவர், கடந்த சில தினங்களுக்கு முன்பு கொப்பால் காரடகியில் அங்கன்வாடி மையத்தை திறந்து வைத்தார். அங்கு இருந்த எழுத்து பலகையில், நல்ல அதிர்ஷ்டம் என்று கன்னடத்தில் திணறி, திணறி எழுதினார். இதை வீடியோ எடுத்து சிலர் சமூக வலைதளங்களில் பகிர்ந்தனர்.

அந்த வீடியோவை பார்த்தவர்கள், கன்னடம் தெரியாதவர்கள் கன்னட துறை அமைச்சரா என்று கிண்டலாக பதிவு செய்தனர்.

இதுகுறித்து கொப்பாலில் சிவராஜ் தங்கடகி நேற்று அளித்த பேட்டியில், நான் பி.எஸ்சி., படித்து உள்ளேன். எனக்கு கன்னடம் எழுத தெரியாதா. என்னை பற்றி பொய் பிரசாரம் பரப்ப சிலர் உள்ளனர். ஊடகங்கள் உண்மை என்ன என்று தெரிந்து கொண்டு செய்திகளை வெளியிட வேண்டும்.

நான் 12 ஆண்டுகள் அமைச்சராக இருந்து உள்ளேன். பல துறைகளை திறம்பட கையாண்டு இருக்கிறேன். கன்னடம் மற்றும் கலாசார அமைச்சராக நான் சிறப்பாக பணியாற்றுவதை எனது எதிரிகளால் பொறுத்து கொள்ள முடியவில்லை, என்றார்.






      Dinamalar
      Follow us