புவி கண்காணிப்பு செயற்கைக்கோள் ஜூலை 30ல் ஏவப்படுகிறது
புவி கண்காணிப்பு செயற்கைக்கோள் ஜூலை 30ல் ஏவப்படுகிறது
UPDATED : ஜூலை 29, 2025 12:00 AM
ADDED : ஜூலை 29, 2025 09:24 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:
இஸ்ரோ எனப்படும் இந்திய விண்வெளி ஆய்வு மையம், அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு மையமான, நாசா உடன் இணைந்து, நிசார் என்ற புவி கண்காணிப்பு செயற்கைக்கோளை உருவாக்கி உள்ளது.
இது, 12 நாட்களுக்கு ஒரு முறை, பூமியை அங்குலம், அங்குலமாக படம் பிடித்து, கட்டுப்பாட்டு மையத்திற்கு அனுப்பும். இந்த செயற்கைக்கோளை சுமந்தபடி, ஜி.எஸ்.எல்.வி., - எப் 16 ராக்கெட், ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டா சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மைய ஏவுதளத்தில் இருந்து, நாளை மாலை, 5:40 மணிக்கு விண்ணில் ஏவப்படுகிறது.
இதற்கான, 27 மணி நேரம் 30 நிமிடங் களுக்கான, கவுன்ட் டவுன் இன்று பிற்பகல், 2:25 மணிக்கு துவங்குகிறது. ராக்கெட் எரிபொருள், செயற்கைக்கோள் என, மொத்தம், 420.50 டன் எடையை சுமந்தபடி விண்ணில் பாய உள்ளது.