sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், மார்ச் 02, 2026 ,மாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

ஒருங்கிணைந்த கல்வித்துறை அலுவலகம் திட்டம்  என்னாச்சு பயிற்சி கூட்டம் நடத்த இடம் தேடும் அவல நிலை

/

ஒருங்கிணைந்த கல்வித்துறை அலுவலகம் திட்டம்  என்னாச்சு பயிற்சி கூட்டம் நடத்த இடம் தேடும் அவல நிலை

ஒருங்கிணைந்த கல்வித்துறை அலுவலகம் திட்டம்  என்னாச்சு பயிற்சி கூட்டம் நடத்த இடம் தேடும் அவல நிலை

ஒருங்கிணைந்த கல்வித்துறை அலுவலகம் திட்டம்  என்னாச்சு பயிற்சி கூட்டம் நடத்த இடம் தேடும் அவல நிலை


UPDATED : மார் 01, 2026 12:19 PM

ADDED : மார் 01, 2026 12:24 PM

Google News

UPDATED : மார் 01, 2026 12:19 PM ADDED : மார் 01, 2026 12:24 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமநாதபுரம்:
ராமநாதபுரம் மாவட்டத்தில் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித்துறை அலுவலகம் கட்டுவதற்கு திட்டமிட்டும் இடம் கிடைக்காமல் மூன்றாண்டுகளாக திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது. தனியாக கூட்ட அரங்கம் இல்லாததால் ஆசிரியர்கள், தலைமையாசிரியர்களுக்கு பயிற்சி, ஆலோசனை கூட்டம் நடத்துவதற்கு இடம் தேடி கல்வித்துறை அதிகாரிகள் சிரமப்படுகின்றனர்.

ராமநாதபுரம் தவிர்த்து பிற மாவட்டங்களில் முதன்மைக் கல்வி அலுவலகம், மாவட்ட கல்வி அலுவலகங்கள், தொடக்க கல்வித்துறை உள்ளிட்ட அலுவலங்கள் ஒருங்கிணைந்த தனி கட்டடத்தில் செயல்படுகிறது. ராமநாதபுரம் மாவட்டத்தில் முதன்மை கல்வி அலுவலகம் பழைய மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் நெருக்கடியில் செயல்படுகிறது. மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் அலுவலகம் ஓம்சக்தி நகரில் ஊராட்சி ஒன்றிய பள்ளி கட்டடத்தில் உள்ளது.

கல்வி மாவட்ட அலுவலகங்களும் வெவ்வேறு இடங்களில் உள்ளது. பள்ளி, ஆசிரியர் பணி தொடர்பான சான்றுகள் தொலைந்துவிட்டால் முதன்மை கல்வி அலுவலகத்தை நாடி வருகின்றனர். ஆசியர்களுக்குரிய பணியிடை பயிற்சி அளிக்கவும் இடமில்லை. கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கம், அரசு உதவி பெறும் பள்ளி, தனியார் பள்ளிகளை நாட வேண்டிய நிலை உள்ளது.

எனவே முதன்மை கல்வி அலுவலகம், மாவட்டக் கல்வி அலுவலகம், தேர்வுத்துறை அலுவலகம், உடற்கல்வி இயக்குநர் அலுவலகம், வட்டார கல்வி அலுவலர் அலுவலகம் ஆகியவற்றை ஒருங்கிணைத்து தனியாக பள்ளி கல்வித்துறைக்கு கட்டடம் கட்டித்தர அரசு உத்தரவிட வேண்டும். இது தொடர்பாக கலெக்டரிடம் முதன்மைக் கல்வி அலுவலகம் சார்பில் இடம்கேட்டு 3 ஆண்டுகளாக மனு அளித்தும் இது வரை தனியாக இடம் வழங்கப்படவில்லை.

இதன் காரணமாக ஒருங்கிணைந்த கல்வி அலுவலகம் அமைக்கும் திட்டம் செயல்படுத்தப்படாமல் அப்படியே கிடப்பில் விடப்பட்டுள்ளது. எனவே வரும் 2026 - 27ம் கல்வி ஆண்டிலாவது ஒருங்கிணைந்த கல்வி வளாகம் அமைக்க மாவட்ட நிர்வாகமும், பள்ளிக் கல்வித்துறையும் இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கல்வி ஆர்வலர்கள் வலியுறுத்தினர்.






      Dinamalar
      Follow us