sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

கல்லுாரி மாணவிகளைக் கொண்டு தேர்தல் விழிப்புணர்வு படம்

/

கல்லுாரி மாணவிகளைக் கொண்டு தேர்தல் விழிப்புணர்வு படம்

கல்லுாரி மாணவிகளைக் கொண்டு தேர்தல் விழிப்புணர்வு படம்

கல்லுாரி மாணவிகளைக் கொண்டு தேர்தல் விழிப்புணர்வு படம்


UPDATED : ஏப் 09, 2024 12:00 AM

ADDED : ஏப் 09, 2024 11:04 AM

Google News

UPDATED : ஏப் 09, 2024 12:00 AM ADDED : ஏப் 09, 2024 11:04 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சியில் 1,000 கல்லுாரி மாணவியர்களைக் கொண்டு இந்திய வரைபடம் வடிவமைத்து தேர்தல் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

கள்ளக்குறிச்சி அடுத்த இந்திலி ஆக்சாலிஸ் சி.பி.எஸ்.இ., பள்ளியில், பாரதி கல்லுாரி மாணவியர்கள் மூலம் இந்திய வரைபடம் வடிவமைத்து, 100 சதவீதம் ஓட்டளிக்க வலியுறுத்தி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரான கலெக்டர் ஷ்ரவன்குமார் தலைமை தாங்கினார்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் எதிர்வரும் லோக்சபா தொகுதி தேர்தலில் 100 சதவீதம் ஓட்டளித்திட வலியுறுத்தி, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டப் பணிகள் துறை சார்பாக இந்திலி ஆக்சாலிஸ் சி.பி.எஸ்.இ. பள்ளி வளாகத்தில் பாரதி மகளிர் கலை-அறிவியல் கல்லுாரி மாணவியர்கள் கொண்டு இந்திய வரைபடம் மற்றும் 100 சதவீதம் ஓட்டளிப்போம் என வரைபடம் வாயிலாக 1000 மாணவிகள் கலெக்டர் ஷ்ரவன்குமார் தலைமையில் தேர்தல் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

இந்நிகழ்ச்சியில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்திட்ட அலுவலர் செல்வி, பள்ளி மற்றும் கல்லூரி முதல்வர்கள், பேராசிரியர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவிகள் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us