UPDATED : ஜன 22, 2026 10:50 AM
ADDED : ஜன 22, 2026 10:51 AM
சிவகங்கை:
சிவகங்கை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் ஜன., 23 ல் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறும் என கலெக்டர் பொற்கொடி தெரிவித்தார்.
அவர் கூறியதாவது:
வேலைவாய்ப்பற்ற இளைஞர்களின் வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பொருட்டு, ஒவ்வொரு மாதமும் இரண்டாம் அல்லது மூன்றாம் வெள்ளிக்கிழமையன்று சிறிய அளவிலான தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் சிவகங்கை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது.
வரும் ஜன., 23 அன்று காலை 10:30 மணிக்கு சிவகங்கை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறும்.
வேலை அளிக்கும் நிறுவனங்கள் தங்களுக்கு தேவையான ஆட்களை தேர்வு செய்து கொள்ளலாம். சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த வேலை தேடுபவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி தனியார் நிறுவனங்களில் வேலை வாய்ப்பினைப் பெறலாம். முகாமில் இலவச திறன் பயிற்சி விண்ணப்பமும், போட்டி தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பிற்குரிய சேர்க்கை நடைபெறும்.
விருப்பமுள்ள 10ம் வகுப்பு முதல் பட்டதாரிகள் வரை தங்களது கல்வி, வயது சான்றுகள், வேலைவாய்ப்பு பதிவு அட்டை, ஆதார் அட்டையுடன் பங்கேற்கலாம். இதில் பங்கேற்றால் பதிவு மூப்பு ரத்து செய்யப்பட மாட்டாது என்றார்.

