sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 01, 2025 ,ஐப்பசி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

மொபைல் போன் கூட கனமாக தெரிந்தது; முதல் முறையாக மனம் திறந்து பேசிய சுக்லா!

/

மொபைல் போன் கூட கனமாக தெரிந்தது; முதல் முறையாக மனம் திறந்து பேசிய சுக்லா!

மொபைல் போன் கூட கனமாக தெரிந்தது; முதல் முறையாக மனம் திறந்து பேசிய சுக்லா!

மொபைல் போன் கூட கனமாக தெரிந்தது; முதல் முறையாக மனம் திறந்து பேசிய சுக்லா!


UPDATED : ஆக 02, 2025 12:00 AM

ADDED : ஆக 02, 2025 11:10 AM

Google News

UPDATED : ஆக 02, 2025 12:00 AM ADDED : ஆக 02, 2025 11:10 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி:
விண்வெளி நிலையத்தில் புவி ஈர்ப்பு விசை காரணமாக, மொபைல் போன் கூட கனமாக தெரிந்தது என பயணத்திற்குப் பிறகு, முதல்முறையாக விண்வெளி வீரர் சுபான்ஷூ சுக்லா மனம் திறந்து பேசி உள்ளார்.

அண்மையில், சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு சென்று ஆய்வு செய்த பிறகு, இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷூ சுக்லா உள்ளிட்ட 4 பேர் பத்திரமாக பூமி திரும்பினர். விண்வெளி நிலையத்திற்கு பயணம் மேற்கொண்ட பிறகு முதல் முறையாக தற்போது சுபான்ஷூ சுக்லா, ஆங்கில சேனலுக்கு அளித்த பேட்டி விவரம் பின்வருமாறு:

* நாங்கள் பூமியை விட்டு வெளியேறிய முதல் முறை, ஈர்ப்பு விசை எவ்வளவு முக்கியம் என்பதை உணர்ந்தோம்.

* திடீரென்று அது போய்விட்டது. உங்கள் உடல் பூஜ்ஜிய ஈர்ப்பு விசைக்கு ஏற்ப மாறுவதற்கு நேரம் எடுக்கும், நீங்கள் திரும்பி வரும்போதும் இதுவே நடக்கும்.

* மொபைல் போன் கூட கனமாக தெரிந்தது.

* மனித உடல் எடையை எவ்வாறு நிர்வகிப்பது மற்றும் நிலைப்படுத்துவது என்பதை கற்றுக்கொள்ள வேண்டும்.

* மூன்று முதல் நான்கு நாட்களில், நாங்கள் இயல்பு நிலைக்குத் திரும்பினோம்.

* எல்லாம் மிதக்கிறது, மேலும் சோதனைகள் வெற்றிகரமாக செய்யப்பட வேண்டும். சில சோதனைகள் மேற்கொண்ட போதே நல்ல முடிவுகள் கிடைத்தன.

* சோதனையின் போது கிடைத்த நல்ல முடிவுகள் ஊக்கமளித்தது.

* இந்தப் பயணத்தின் போது சேகரிக்கப்பட்ட அறிவியல் மாதிரிகள் மற்றும் தரவுகள் ஏற்கனவே இந்தியாவில் உள்ள ஆராய்ச்சியாளர்களுக்கு அனுப்பப்பட்டு உள்ளன.

* விண்வெளி, அறிவியல் மற்றும் மருத்துவத்தை முன்னேற்றுவதில் இந்தப் பயணத்தின் பங்களிப்பை வலியுறுத்தி, கண்டுபிடிப்புகள் குறித்து விரைவில் விரிவாகப் விவாதிக்க நடத்த ஆவலுடன் இருக்கிறேன்.

* நான் சாதாரணமாக உணர்கிறேன், மற்றொரு விண்வெளிப் பயணத்திற்கு நான் தயாராக இருக்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

வருங்காலத்திலும் விண்வெளி நிலையத்திற்கு பயணம் மேற்கொள்ள சுக்லா தனது விருப்பத்தை வெளிப்படுத்தி இருப்பது, மனித விண்வெளிப் பயணத்தில் இந்தியாவின் வளர்ந்து வரும் நம்பிக்கையையும் லட்சியத்தையும் பிரதிபலிக்கிறது.






      Dinamalar
      Follow us