sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், ஜனவரி 22, 2026 ,தை 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

மாணவர்களுக்கு சிற்றுண்டி தரும் திட்டம் துவக்கம்

/

மாணவர்களுக்கு சிற்றுண்டி தரும் திட்டம் துவக்கம்

மாணவர்களுக்கு சிற்றுண்டி தரும் திட்டம் துவக்கம்

மாணவர்களுக்கு சிற்றுண்டி தரும் திட்டம் துவக்கம்


UPDATED : ஜன 20, 2026 12:45 PM

ADDED : ஜன 20, 2026 12:46 PM

Google News

UPDATED : ஜன 20, 2026 12:45 PM ADDED : ஜன 20, 2026 12:46 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெரம்பூர்:
பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு, சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை சென்னை மாநகராட்சி நேற்று துவக்கியது.

பெரம்பூர் பல்லவன் சாலையில் உள்ள சென்னை பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், பிளஸ் 1 பயிலும் 604 மாணவியருக்கு, சைக்கிள்களை, ஹிந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு துவக்கி வைத்தார்.

மேலும், சென்னை மாநகராட்சி பள்ளிகளில், 10ம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதும் மாணவ, மாணவியருக்கு மாலை நேர சிறப்பு வகுப்புகளில் சிற்றுண்டி வழங்கும் திட்டத்தையும் அவர் துவக்கி வைத்தார்.

நிகழ்வில், மேயர் பிரியா பேசியதாவது:

பொதுத் தேர்வுக்கு தயாராகி வரும் மாநகராட்சி பள்ளி மாணவ, மாணவியர் சிறப்பு வகுப்புகளில் பங்கேற்கின்றனர். அவர்களுக்கு மாலை நேரத்தில் சிற்றுண்டி வழங்கும் திட்டம் இன்று துவக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம், 12,558 பேர் பயன் பெறுவர். இந்த வாய்ப்பை பயன்படுத்தி, மாணவ, மாணவியர் நன்றாக படித்து உயர வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.






      Dinamalar
      Follow us