UPDATED : செப் 14, 2026 12:33 PM
ADDED : செப் 14, 2026 12:34 PM
அ நிறம் | அளவு
விழுப்புரம்:
விழுப்புரம் இ.எஸ்., கல்வியியல் கல்லுாரியில் முதலாம் ஆண்டு வகுப்பு துவக்க விழா நடந்தது.
விழாவிற்கு, கல்விக் குழுமத் தலைவர் செல்வமணி தலைமை தாங்கி துவங்கி வைத்தார். கல்லுாரி முதல்வர் செந்தில்முருகன் வரவேற்றார். சிறப்பு விருந்தினர் மாநில கருத்தாளர் ஆரோக்கியதாஸ் சிறப்புரையாற்றினார்.
பொறியியல் கல்லுாரி முதல்வர் இந்திரா, ஏழுமலை தொழில்நுட்பக் கல்லுாரி முதல்வர் ஆமோஸ் ராபர்ட் ஜெயச்சந்திரன் வாழ்த்திப் பேசினர்.
முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு கல்வியின் முக்கியத்துவம், சிறந்த ஆசிரியராக உருவாக வேண்டியதின் அவசியம், அதற்கான பொறுப்புகள் மற்றும் கல்வித் துறையில் உள்ள வாய்ப்புகள் குறித்து ஆலோசனை வழங்கப்பட்டது. முதலாம் ஆண்டு மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் பங்கேற்றனர்.
