sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, ஜனவரி 31, 2026 ,தை 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

இளைஞர்களுக்கு இலவச திறன் பயிற்சி

/

இளைஞர்களுக்கு இலவச திறன் பயிற்சி

இளைஞர்களுக்கு இலவச திறன் பயிற்சி

இளைஞர்களுக்கு இலவச திறன் பயிற்சி


UPDATED : ஜன 29, 2026 01:24 PM

ADDED : ஜன 29, 2026 01:25 PM

Google News

UPDATED : ஜன 29, 2026 01:24 PM ADDED : ஜன 29, 2026 01:25 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை: மத்திய, மாநில அரசுகளின் பங்களிப்புடன் செயல்படுத்தப்படும், 'தீன் தயாள் உபாத்யாய கிராமப்புற திறன் மேம்பாட்டுத் திட்டத்தின்' கீழ், கிராமப்புற இளைஞர்களுக்குப் பல்வேறு தொழிற்பயிற்சிகள் வழங்கப்பட உள்ளன.

பயிற்சிகளில் சேர வரும் 31ம் தேதிக்குள், அந்தந்த வட்டார மகளிர் திட்ட அலுவலகத்தை தொடர்பு கொள்ள மாவட்டத் திட்ட அலுவலர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் மூலம் செயல்படுத்தப்படும் இத்திட்டத்தில், கோவை மாவட்டத்தில் கோவைபுதூர், பொள்ளாச்சி மற்றும் அன்னூர் ஆகிய பகுதிகளில் உள்ள பயிற்சி நிறுவனங்கள் மூலம், மூன்று முதல் நான்கு மாதங்கள் வரை உண்டு உறைவிட பயிற்சிகள் அளிக்கப்படவுள்ளன.

ட்ரோன் ஆபரேட்டர், மொபைல் போன் டெக்னீஷியன், ஏஐ அனலிஸ்ட், வெப் டெக்னாலஜிஸ்ட் உள்ளிட்ட நவீன காலத்திற்கு தேவையான பல்வேறு பிரிவுகளில், இந்த பயிற்சிகள் வழங்கப்படவுள்ளன.

சிறுபான்மையினர், எஸ்.சி., எஸ்.டி., இளைஞர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு தேர்வு செய்யப்படுவர்.






      Dinamalar
      Follow us