sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

2026ல் எதிர்க்கட்சி தலைவர் பதவி பரிசு அரசு ஊழியர்கள் சங்கம் எச்சரிக்கை

/

2026ல் எதிர்க்கட்சி தலைவர் பதவி பரிசு அரசு ஊழியர்கள் சங்கம் எச்சரிக்கை

2026ல் எதிர்க்கட்சி தலைவர் பதவி பரிசு அரசு ஊழியர்கள் சங்கம் எச்சரிக்கை

2026ல் எதிர்க்கட்சி தலைவர் பதவி பரிசு அரசு ஊழியர்கள் சங்கம் எச்சரிக்கை


UPDATED : பிப் 07, 2025 12:00 AM

ADDED : பிப் 07, 2025 10:12 AM

Google News

UPDATED : பிப் 07, 2025 12:00 AM ADDED : பிப் 07, 2025 10:12 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:
தமிழகத்தில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தாவிட்டால், 2026 தேர்தலில் முதல்வர் ஸ்டாலினுக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவியை பரிசளிப்போம் என தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்க தலைவர் தமிழ்ச்செல்வி எச்சரித்துள்ளார்.

இது குறித்து, மாநில தலைவர் தமிழ்ச்செல்வி, பொதுச்செயலர் ஜெயராஜ ராஜேஸ்வரன் கூறியதாவது:



பழைய ஓய்வூதிய திட்டம், புதிய ஓய்வூதிய திட்டம் மற்றும் ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டம் ஆகிய திட்டங்கள் தொடர்பாக விரிவாக ஆராய, மூன்று பேர் கொண்ட குழு அமைத்து தி.மு.க., அரசு ஆணை பிறப்பித்துள்ளது. இக்குழு விரிவான அறிக்கை மற்றும் பரிந்துரைகளை ஒன்பது மாதத்திற்குள் அரசுக்கு சமர்ப்பிக்க வேண்டும் என அறிவித்துள்ளது.

குழு அமைப்பது என்பது, 2021 சட்டசபை தேர்தலுக்கான தி.மு.க.,வின் வாக்குறுதி எண் 309க்கு எதிரானது. தி.மு.க., அளித்த தேர்தல் வாக்குறுதியை அமல்படுத்தாமல், குழு அமைத்து அரசு ஊழியர்களை ஏமாற்றலாம் என்ற முதல்வர் ஸ்டாலின் திட்டம் பலிக்காது.

கடந்த 2021 சட்டசபை தேர்தலில், கட்சியின் பொதுச்செயலர் துரைமுருகனின் தொகுதி உட்பட 17 தொகுதிகளில் தி.மு.க.,வின் வெற்றியை தீர்மானித்தது, அரசு ஊழியர்களின் ஓட்டுகள் தான்.

ஏறிய ஏணியை எட்டி உதைத்தவர்கள் வரலாற்றில் துாக்கி எறியப்படுவர் என்பதை முதல்வர் மறக்க வேண்டாம். குழு அமைத்து, அரசு ஊழியர்களுக்கு நம்பிக்கை துரோகம் செய்யும் நடவடிக்கையை கைவிட்டு, தேர்தல் வாக்குறுதி அடிப்படையில், கொள்கை ரீதியாக பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.

இதை வலியுறுத்தி, பிப்., 25ல் தமிழகம் முழுதும் தற்செயல் விடுப்பு போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளோம்.

அரசு ஊழியர்களுக்கு எதிரான துரோக நடவடிக்கைகளை முதல்வர் ஸ்டாலின் தொடரும் பட்சத்தில், 2026 சட்டசபை தேர்தலில் ஸ்டாலினுக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவியை பரிசளிப்பதை யாராலும் தடுக்க முடியாது.

இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.






      Dinamalar
      Follow us