sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

பெயர்ந்து விழுந்த சீலிங் அரசு பள்ளியில் அவலம்

/

பெயர்ந்து விழுந்த சீலிங் அரசு பள்ளியில் அவலம்

பெயர்ந்து விழுந்த சீலிங் அரசு பள்ளியில் அவலம்

பெயர்ந்து விழுந்த சீலிங் அரசு பள்ளியில் அவலம்


UPDATED : ஜூலை 15, 2024 12:00 AM

ADDED : ஜூலை 15, 2024 08:54 AM

Google News

UPDATED : ஜூலை 15, 2024 12:00 AM ADDED : ஜூலை 15, 2024 08:54 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருத்தணி: திருத்தணி நகராட்சி முருகப்ப நகரில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில், 100க்கும் மேற்பட்ட மாணவ -மாணவியர் படித்து வருகின்றனர்.

மாலை 4:20 மணிக்கு, வழக்கம்போல் பள்ளி முடிந்ததும் அனைத்து மாணவர்களும் வீட்டிற்கு சென்றனர். சிறிது நேரத்தில், ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் அமரும் பள்ளி கட்டடத்தின் சீலிங் இருந்து சிமென்ட் காரை பெயர்ந்து விழுந்தது.

இதில் வகுப்பறையில் இருந்த நாற்காலி சேதம் அடைந்தது. மாணவர்கள் வீட்டிற்கு சென்ற பின் நடந்த சம்பவத்தால், அதிர்ஷ்டவசமாக அசம்பாவிதம் ஏதும் ஏற்படவில்லை. தரமற்ற கட்டுமான பணியே காரணம் என, பெற்றோர் குற்றஞ்சாட்டினர்.

சம்பவ இடத்திற்கு, திருத்தணி வட்டார கல்வி அலுவலர் சலபதி மற்றும் நகராட்சி அதிகாரிகள் வந்து ஆய்வு செய்தனர். உடனடியாக சீரமைப்பு பணிகள் மேற்கொள்ள சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு, கல்வி அலுவலர் பரிந்துரை செய்தார்.






      Dinamalar
      Follow us