sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

ஓட்டுப்பதிவு; அரசு பள்ளிகள் தயார்

/

ஓட்டுப்பதிவு; அரசு பள்ளிகள் தயார்

ஓட்டுப்பதிவு; அரசு பள்ளிகள் தயார்

ஓட்டுப்பதிவு; அரசு பள்ளிகள் தயார்


UPDATED : ஏப் 18, 2024 12:00 AM

ADDED : ஏப் 18, 2024 05:14 PM

Google News

UPDATED : ஏப் 18, 2024 12:00 AM ADDED : ஏப் 18, 2024 05:14 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை:
லோக்சபா தேர்தல் ஓட்டுப்பதிவையொட்டி, உடுமலை சுற்றுப்பகுதி அரசுப்பள்ளிகளில் அடிப்படை கட்டமைப்புகள் தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

லோக்சபா தேர்தல் ஓட்டுப்பதிவு, மாநிலம் முழுவதும் நாளை நடக்கிறது. இதையொட்டி இன்று மாலை முதல் ஓட்டுச்சாவடி மையங்களும், தயார்நிலையில் வைக்கப்பட்டிருக்க வேண்டும். உடுமலை சுற்றுப்பகுதி அரசுப்பள்ளிகளில், அந்தந்த பள்ளி ஆசிரியர்கள் கடந்த இரண்டு நாட்களாகவே அதற்கான பணிகளில் ஈடுபட்டனர்.

பள்ளிகளில் ஓட்டுச்சாவடி மையங்களாக மாற்றும் போது, மேஜைகள், இருக்கைகள் போட வேண்டிய இடங்களில் போட்டு வைப்பது, துாய்மைப்பணிகள், மின்சார வசதி, மின்விளக்குகள், பள்ளியின் பாதுகாப்பு உட்பட அனைத்து பணிகளையும் நிறைவு செய்துள்ளனர்.

தலைமையாசிரியர்கள் கூறியதாவது:


ஒவ்வொரு அரசு பள்ளிக்கும், வெவ்வேறு பகுதிகளிலிருந்து தான் அலுவலர்கள் வருகின்றனர். தேர்தல் பணிகளில் ஒன்றாக ஓட்டுசாவடி மையங்களில் போஸ்டர்கள், வழிகாட்டிகள் ஒட்டப்படுகின்றன.

ஆனால் பல பள்ளிகளில், அவற்றை நீக்க முடியாத அளவு ஒட்டி விடுகின்றனர். இதனால், நீண்ட நாட்களாக பராமரிக்கப்பட்டு வந்த வண்ண மயமான பள்ளிச்சுவர்கள், மீண்டும் அசுத்தமாகின்றன.

பள்ளிச்சுவர்களை முடிந்த வரை சேதப்படுத்தாமல், தேர்தல் போஸ்டர்களை ஒட்டுவதற்கு அலுவலர்கள் ஒத்துழைக்கலாம். அரசு பள்ளிகளில் மீண்டும் சுவர்களை புதுப்பிப்பது கடினம்.
இவ்வாறு கூறினர்.






      Dinamalar
      Follow us