அரசு ஆசிரியர் பயிற்சி பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு
அரசு ஆசிரியர் பயிற்சி பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு
UPDATED : மே 30, 2026 09:53 AM
ADDED : மே 30, 2026 09:56 AM
கடலுார்:
வடலுார் அரசு ஆசிரியர் பயிற்சிப் பள்ளியில் 1988 - 90 ஆண்டுகளில் பயின்ற மாணவர்கள் 36 ஆண்டுகளுக்கு பின் சந்தித்துக் கொண்டனர்.
வடலுார் அரசு ஆசிரியர் பயிற்சிப்பள்ளி பல ஆசிரியர், ஆசிரியைகளை உருவாக்கி உள்ளது. அதன்படி கடந்த, 1988 - 90ம் ஆண்டு களில் பயன்ற மாணவர்கள் பல்வேறு பள்ளிகளில் ஆசிரியராக பணியாற்றி வருகின்றனர். இன்னும் சிலர் கல்வித்துறையில் அதிகாரிகளாகவும் உள்ளனர். இவர்கள் 36 ஆண்டுகளுக்கு பின் வடலுார் ஆசிரியர் பயிற்சி பள்ளியில், சந்திக்கும் நிகழ்ச்சி நடந்தது.
வடலுார் அரசு ஆசிரியர் பயிற்சி பள்ளி முதல்வர் பழனி தலைமை தாங்கினார். நாராயணசாமி வரவேற்றார். முன்னாள் இணை இயக்குனர் சீனிவாசன் முன்னிலை வகித்தார்.
முன்னாள் விரிவுரையாளர் தர்மலிங்கம், டாக்டர் நாகராஜன், மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் தியாகராஜன் வாழ்த்துரை வழங்கினர். தலையைாசிரியர் அருணகிரி நன்றி கூறினார்.
