UPDATED : மார் 29, 2024 12:00 AM
ADDED : மார் 29, 2024 11:05 AM

ஊட்டி:
மாநில கவர்னர் ரவி ஐந்து நாட்கள் சுற்று பயணமாக நாளை, 30ம் தேதி ஊட்டி வருகிறார்.
சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை வருகிறார். அங்கிருந்து கார் மூலம் சாலை மார்க்கமாக கோத்தகிரி வழியாக, மாலை, 6: 00 மணிக்கு ஊட்டி ராஜ்பவன் வருகிறார்.
31ம் தேதி புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட தெப்பக்காடு யானைகள் முகாம் செல்கிறார். அங்கு யானைகள் பராமரிப்பு குறித்து பார்வையிடுகிறார். 1ம் தேதி ஊட்டி ராஜ்பவன் மாளிகையில் ஓய்வு எடுக்கிறார். 2ம் தேதி குன்னுாரில் உள்ள தனியார் ஓட்டலுக்கு செல்கிறார்.
3ம் தேதி குந்தா பகுதியில் உள்ள தனியார் எஸ்டேட்டுக்கு செல்கிறார். தொடர்ந்து, 4ம் தேதி காலை, 11: 00 மணியளவில் ஊட்டி ராஜ்பவனிலிருந்து கார் மூலம் கோவை விமான நிலையம் சென்று அங்கிருந்து விமானம் மூலம் சென்னை செல்கிறார். கவர்னர் சுற்று பயணத்தை ஒட்டி போலீசார் பாதுகாப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

