sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

மாணவியருக்கு ஓய்வறை அரசுக்கு ஐகோர்ட் கெடு

/

மாணவியருக்கு ஓய்வறை அரசுக்கு ஐகோர்ட் கெடு

மாணவியருக்கு ஓய்வறை அரசுக்கு ஐகோர்ட் கெடு

மாணவியருக்கு ஓய்வறை அரசுக்கு ஐகோர்ட் கெடு


UPDATED : செப் 27, 2024 12:00 AM

ADDED : செப் 27, 2024 10:10 PM

Google News

UPDATED : செப் 27, 2024 12:00 AM ADDED : செப் 27, 2024 10:10 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகளில், மாணவியருக்கான தனி ஓய்வறைகள் அமைக்க, 8.55 கோடி ரூபாயை மூன்று வாரங்களில் ஒதுக்க வேண்டும் என, தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம், கெடு விதித்து உள்ளது.

அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள்,கல்லுாரிகளில், மாணவியருக்கு சானிட்டரி நாப்கின் வழங்கும் தானியங்கி இயந்திரங்கள் செயல்படாமல் உள்ளதாக வெளியான செய்தி அடிப்படையில், சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கை விசாரணைக்கு எடுத்தது.

இந்த வழக்கு, பொறுப்பு தலைமை நீதிபதி டி.கிருஷ்ணகுமார், நீதிபதி பி.பி.பாலாஜி அடங்கிய முதல் பெஞ்ச் முன், நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, கூடுதல் அட்வகேட் ஜெனரல் ஜெ.ரவீந்திரன் ஆஜராகி, மாநிலம் முழுதும் உள்ள அனைத்து அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகளிலும், மாணவியருக்காக தலா 5 லட்சம் ரூபாய் வீதம், 8.55 கோடி ரூபாய் செலவில் தனி ஓய்வறைகள் கட்டப்பட உள்ளன.

பள்ளிகளில் நாப்கின் இயந்திரங்கள் பொருத்தப்பட்டுள்ள விபரங்கள் குறித்த தகவல் சேகரிக்கப்பட்டு, தொகுக்கப்பட்டு வருகின்றன, என்றார்.

இதையடுத்து, அரசு கல்லுாரிகளில், மாணவியருக்கு தனி ஓய்வறைகள் கட்ட, 8.55 கோடி ரூபாயை, மூன்று வாரங்களில் ஒதுக்கும்படி அரசுக்கு உத்தரவிட்ட முதல் பெஞ்ச், வழக்கை மூன்று வாரங்களுக்கு தள்ளிவைத்தது.






      Dinamalar
      Follow us