UPDATED : மார் 03, 2025 12:00 AM
ADDED : மார் 03, 2025 09:09 AM
விழுப்புரம் :
தமிழக பட்டதாரி ஆசிரியர் கூட்டணியின், விழுப்புரம் மாவட்ட நிர்வாகக்குழு கூட்டம் நடந்தது.
விழுப்புரத்தில் நடந்த கூட்டத்திற்கு, மாவட்ட செயலாளர் குருமூர்த்தி தலைமை தாங்கினார்.
மாநில தணிக்கையாளர் அன்பழகன், பொதுக்குழு உறுப்பினர் செல்வத்துரை, பொருளாளர் குணசேகர் முன்னிலை வகித்தனர். மாநில பொது செயலாளர் செல்லையா சிறப்புரையாற்றினார்.
தொடக்க கல்வி துறையில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு, முதுகலை பட்டதாரி ஆசிரியர் நேரடி நியமனத்தில் இருந்து 10 சதவீதம் விதிகளில் திருத்தம் செய்து, நடுநிலை பள்ளிகளில் பணிபுரியும் தகுதியுள்ள ஆசிரியர்களுக்கு முதுகலை பட்டதாரி ஆசிரியராக பதவி உயர்வு வழங்க வேண்டும்.
நடுநிலை பள்ளி தலைமை ஆசிரியரை மாவட்ட தொடக்க கல்வி அலுவலருக்கு நேர்முக உதவியாளராக நியமித்தல், வரும் மார்ச் மாதம் விழுப்புரத்தில் நடக்கவுள்ள முப்பெரும் விழாவை சிறப்பாக கொண்டாடுதல் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
துணை தலைவர்கள் ஞானவேல், ராஜேந்திரன், வட்டார பொறுப்பாளர்கள் முத்துவேல், யுவராஜ், ஜெயந்தி, பாபு, சவரிமுத்து உட்பட பலர் பங்கேற்றனர்.