sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 09, 2025 ,புரட்டாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

வேலுார் டைடல் பார்க் திறக்கும் முன் ஹவுஸ்புல்

/

வேலுார் டைடல் பார்க் திறக்கும் முன் ஹவுஸ்புல்

வேலுார் டைடல் பார்க் திறக்கும் முன் ஹவுஸ்புல்

வேலுார் டைடல் பார்க் திறக்கும் முன் ஹவுஸ்புல்


UPDATED : டிச 13, 2024 12:00 AM

ADDED : டிச 13, 2024 06:30 PM

Google News

UPDATED : டிச 13, 2024 12:00 AM ADDED : டிச 13, 2024 06:30 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:
துாத்துக்குடியை போல, வேலுார் மினி டைடல் பார்க் திறப்பதற்கு முன்பே, 100 சதவீத அலுவலக இடங்களையும் ஒரு நிறுவனம் முன்பதிவு செய்துள்ளது.

தமிழக அரசின் டைடல் பார்க் நிறுவனம், சிறிய நகரங்களில், மினி டைடல் பார்க் அமைத்து வருகிறது. அதன்படி, வேலுார் மாவட்டம் வேலுார் மேல்மொனவூர், அப்துல்லாபுரத்தில், 32 கோடி ரூபாய் செலவில், 60,000 சதுர அடியில் நான்கு தளங்களுடன், மினி டைடல் பார்க் கட்டப்பட்டு வருகிறது.

கட்டுமான பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், அடுத்த ஆண்டு துவக்கத்தில் திறக்கப்பட உள்ளது. தற்போது, மருத்துவ துறையின் தகவல் தொழில்நுட்ப சேவையில் ஈடுபட்டுள்ள ஒரு தனியார் நிறுவனம், வேலுார் டைடல் பார்க் அலுவலகம் முழுதையும் முன்பதிவு செய்துள்ளது. இதனால், 500க்கும் மேற்பட்டோருக்கு வேலை கிடைக்க உள்ளது.

துாத்துக்குடி மாவட்டம், மீளவிட்டான் கிராமத்தில், 32 கோடி ரூபாயில், 63,100 சதுர அடியில் நான்கு தளங்களுடன், மினி டைடல் பார்க் கட்டப்பட்டுள்ளது. இது, விரைவில் திறக்கப்பட உள்ளது. அதற்கு முன்னதாகவே, டைடல் பார்க்கில் உள்ள அலுவலக இடங்கள் முழுதையும் இரு நிறுவனங்கள் வாடகைக்கு எடுத்துள்ளன.







      Dinamalar
      Follow us