sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

முதலீட்டுக்காக மட்டும் நான் இங்கு வரவில்லை: ஜெர்மனியில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு

/

முதலீட்டுக்காக மட்டும் நான் இங்கு வரவில்லை: ஜெர்மனியில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு

முதலீட்டுக்காக மட்டும் நான் இங்கு வரவில்லை: ஜெர்மனியில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு

முதலீட்டுக்காக மட்டும் நான் இங்கு வரவில்லை: ஜெர்மனியில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு


UPDATED : செப் 03, 2025 12:00 AM

ADDED : செப் 03, 2025 07:01 PM

Google News

UPDATED : செப் 03, 2025 12:00 AM ADDED : செப் 03, 2025 07:01 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:
வெறும் முதலீட்டுக்காக மட்டும் நான் இங்கு வரவில்லை. ஜெர்மனி- தமிழகம் ஆகிய 2 பொருளாதாரங்களுக்கு இடையே பாலம் அமைக்க வந்திருக்கிறேன் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.

ஜெர்மனியில் முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:
தமிழகம் தான் இந்தியாவிலேயே 2வது பெரிய பொருளாதார மாநிலம். பொருளாதாரத்தில் இரட்டை இலக்க வளர்ச்சி பெற்ற மாநிலம் தமிழகம். அதிக அளவில் தொழிற்சாலைகள் உள்ள மாநிலம் தமிழகம். உலகின் முன்னணி தொழில் வல்லரசுகளில் ஒன்றாக ஜெர்மனி விளங்குகிறது.

நவீன உற்பத்தி, துல்லிய பொறியியல், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, மோட்டார் வாகன தொழில்நுட்பம் ஆகியவற்றில் ஜெர்மனி வலிமையோடு உள்ளது. ஐரோப்பியாவின் முதுகெலும்பாக ஜெர்மனி உள்ளது. ஜெர்மனிக்கு முதலீடுகளை ஈர்க்க வந்ததற்காக பெருமை அடைகிறேன். ஜெர்மனியின் பண்பாடு, தொழில்நுட்பம், புத்தாக்கம் ஆகியவை என்னை வெகுவாக ஈர்த்துள்ளது.

உலகின் முன்னணி தொழில் வல்லரசுகளில் ஒன்றாக ஜெர்மனி விளங்குகிறது. முன்னணி உயர்கல்வி நிறுவனங்கள், முன்னணி ஆராய்ச்சி நிறுவனங்கள், 54 லட்சம் எம்எஸ்எம்இ., நிறுவனங்கள் தமிழகத்தில் உள்ளன.

60க்கும் மேற்பட்ட ஜெர்மனி நிறுவனங்கள் தங்களது நிறுவனங்களை நிறுவ தமிழகத்தை தேர்ந்தெடுத்து உள்ளன. ஜெர்மனி, தமிழகம் இடையே பொருளாதாரத்தில் நிறைய ஒற்றுமைகள் உள்ளன. ஜெர்மனி எப்படி ஐரோப்பிய யூனியனின் முக்கியத் தொழில் துறை நாடாக இருக்கிறதோ, அதேபோல இந்திய ஒன்றியத்தில் தொழில்துறையின் இதயத் துடிப்பாக தமிழகம் இருக்கிறது. இன்னும் சொல்ல வேண்டுமென்றால் தமிழகம் தான் இந்தியாவின் ஜெர்மனி.

பிஸ்னஸ்

வெறும் முதலீட்டுக்காக மட்டும் நான் இங்கு வரவில்லை. ஜெர்மனி- தமிழகம் ஆகிய 2 பொருளாதாரங்களுக்கு இடையே பாலம் அமைக்க வந்திருக்கிறேன். தமிழகத்துக்கு வரும் போது நீங்கள் வியாபாரத்திற்கான சண்டையாக மட்டும் பார்க்க மாட்டீங்க. உங்களுடன் இருந்து உங்கள் வெற்றியை கொண்டாடுகிற பங்குதாரர்களாக பார்ப்பீர்கள்.

இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.

ரூ.7,020 கோடியில் ஒப்பந்தங்கள்
முன்னதாக, சமூக வலைதளத்தில் முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:


ஜெர்மனி வருகையின் போது தமிழகத்திற்கு மொத்தம் ரூ.7,020 கோடி மதிப்பிலான 26 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன; இதனால் 15,000 வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் ஜெர்மனி முதலீட்டாளர் மாநாட்டில், ரூ. 3,819 கோடி மதிப்புள்ள 23 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன. அவை 9,000 க்கும் மேற்பட்ட வேலைவாய்ப்புகளை உருவாக்கும். உலகளாவிய தலைவர்கள் தங்கள் அடுத்த கட்ட வளர்ச்சிக்கு தமிழகத்தை தேர்ந்து எடுத்து உள்ளனர்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.







      Dinamalar
      Follow us