sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

உயர் கல்வியில் சேர்க்கை பெற்ற அரசு பள்ளி மாணவர்கள் அதிகரிப்பு

/

உயர் கல்வியில் சேர்க்கை பெற்ற அரசு பள்ளி மாணவர்கள் அதிகரிப்பு

உயர் கல்வியில் சேர்க்கை பெற்ற அரசு பள்ளி மாணவர்கள் அதிகரிப்பு

உயர் கல்வியில் சேர்க்கை பெற்ற அரசு பள்ளி மாணவர்கள் அதிகரிப்பு


UPDATED : ஆக 06, 2025 12:00 AM

ADDED : ஆக 06, 2025 08:57 AM

Google News

UPDATED : ஆக 06, 2025 12:00 AM ADDED : ஆக 06, 2025 08:57 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை:
கோவையில் அரசுப்பள்ளிகளில் படித்து, உயர்கல்வியில் சேர்க்கை பெற்ற மாணவர்களின் விகிதம், கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 15 சதவீதத்துக்கு மேல் உயர்ந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

மாவட்டத்தில் உள்ள 114 அரசு மேல்நிலைப் பள்ளிகளில், பிளஸ் 2 பொதுத்தேர்வில் 10,896 மாணவர்கள் பங்கேற்றனர். இவர்களில் 10,301 மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். துணைத்தேர்வு எழுதிய, 656 பேரில் 350 மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். இவர்களில் பெரும்பாலான மாணவர்கள் கலை, அறிவியல், பொறியியல் கல்லூரிகளில் சேர்ந்துள்ளனர்.

அரசுப்பள்ளிகளில் மாணவர்களின் தேர்ச்சி விகிதம் மற்றும் உயர்கல்வி சேர்க்கை விவரங்களைக் கண்காணிக்க, மாவட்ட கலெக்டர், மாநகராட்சி கமிஷனர் உட்பட முக்கிய அரசு அதிகாரிகள் நோடல் அதிகாரிகளாக, பள்ளிகளுக்கு நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்த கண்காணிப்பு நடவடிக்கைகள் வாயிலாகவும், உயர்கல்வி சேர்க்கை விகிதம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கின்றனர். இதன் வாயிலாக, அரசுப்பள்ளி மாணவர்களில் 98 சதவீதம் பேர் உயர்கல்வியில் சேர்ந்துள்ளனர். 2024-2025 கல்வியாண்டில், உயர்கல்வி சேர்க்கை விகிதம் 83.6 சதவீதமாக இருந்தது. தற்போது இது 98.6 சதவீதமாக உயர்ந்துள்ளது.

கல்லுாரியில் சேராத 150 மாணவர்கள்


திட்ட ஒருங்கிணைப்பாளர் கூறுகையில், கல்லூரிக் கனவு திட்டத்தின் கீழ் உயர்கல்வி சேர்க்கையை அதிகரிக்க, பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. மாற்றுத்திறன், குடும்பச் சூழல், விருப்பமின்மை போன்ற காரணங்களால் சுமார் 150 மாணவர்கள் இன்னும் கல்லூரியில் சேரவில்லை. அவர்களையும் சேர்க்க முயற்சி செய்து வருகிறோம் என்றார்.






      Dinamalar
      Follow us