தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/இந்திய விண்வெளி திட்டங்கள் உற்சாகம் அளிக்கிறது: சுனிதா வில்லியம்ஸ்

இந்திய விண்வெளி திட்டங்கள் உற்சாகம் அளிக்கிறது: சுனிதா வில்லியம்ஸ்

இந்திய விண்வெளி திட்டங்கள் உற்சாகம் அளிக்கிறது: சுனிதா வில்லியம்ஸ்


UPDATED : ஜன 23, 2026 11:04 AM

ADDED : ஜன 23, 2026 11:06 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜன 23, 2026 11:04 AM ADDED : ஜன 23, 2026 11:06 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

திருவனந்தபுரம்:
'இந்தியாவின் விண்வெளித் திட்டங்கள் உற்சாகம் அளிக்கிறது,' என நாசா விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் கூறியுள்ளார்

இந்தியா வந்துள்ள சுனிதா வில்லியம்ஸ், திருவனந்தபுரத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:
இந்தியாவின் பயணம் அற்புதமாக இருந்தது. இந்தியாவில் இருப்பது மகிழ்ச்சியாகவும், பெருமையாகவும் உள்ளது. கனவு என்பது ஒருவரின் கற்பனைக்கு ஏற்றவாறு பெரியதாக இருக்கும். குறிப்பாக இன்றைய இந்த சூழலில் விஷயங்கள் மிக வேகமாக மாறிக் கொண்டிருக்கின்றன. மக்கள் புதிய யோசனைகளைக் கொண்டு வந்து அவற்றை நிஜமாக்கி வருகிறார்கள்.

கடந்த காலத்தில் கண்டுபிடிப்புகள் தொழில்நுட்பத்தால் தடைபடக்கூடும் என்ற நிலை இருந்தது. ஆனால், இப்போது மக்களிடம் உள்ள கண்டுபிடிப்புகளுக்கு ஈடுகொடுக்கும் வகையில், தொழில்நுட்பம் வேகமாக வளர்ந்து வருகிறது. கற்பனை மட்டுமே உண்மையான வரம்பு.

இந்தியாவின் விண்வெளித் திட்டங்கள் உற்சாகம் அளிக்கிறது. எந்தவொரு திட்டமும் நிஜமாகி வருகிறது. சர்வதேச அளவில் மேலும் மேலும் ஈடுபடும் அதே நேரத்திலும் சொந்த திட்டங்களில் தற்சார்புடன் செயல்பட்டு வருகிறது. வெகுவிரைவில் விண்வெளியில் இஸ்ரோ கால் பதிக்கும். இந்திய வீரர் கேப்டன் சுபான்ஷூ சுக்லாவை நேரில் சந்தித்தது மகிழ்ச்சி.

பூமியில் மனிதர்களுக்கு இடையே பெரிய மோதல் நடந்து வருகிறது. இந்த மோதலை நாமே உருவாக்கிக் கொள்கிறோம். இவை அனைத்துக்கும் தீர்வு காண முடியும். சர்வதேச அளவில் நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து பணியாற்றினால் அனைத்து பிரச்னைகளுக்கும் தீர்வு காணலாம். இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us