தீவிரமடையும் பருவ மழை: பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
தீவிரமடையும் பருவ மழை: பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
UPDATED : அக் 22, 2025 08:40 AM
ADDED : அக் 22, 2025 08:40 AM

சென்னை:
தமிழகத்தில் பெய்து வரும் கன மழை காரணமாக, கடலுார் , செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், தஞ்சை, கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை, திருவாரூர், திருவள்ளூர், சிவகங்கை, ராணிப்பேட்டை, திருச்சி ஆகிய மாவட்ட பள்ளி, கல்லுாரிகளுக்கு இன்று (அக்.22) விடுமுறை அளிக்கப்படுவதாக அந்தந்த மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. சென்னையில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்ததை அடுத்து, சென்னை வானிலை மையம் சென்னைக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டதை அடுத்து, பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்படுகிறது.
சென்னையில் 900 தீயணைப்பு வீரர்கள் தயார் நிலையில் உள்ளனர். மழை நீர் தேங்க வாய்ப்பு உள்ள 17 இடங்களைக் கண்டறிந்து முன்னெச்சரிக்கையாக தேவையான உபகரணங்கள் உடன் முகாமிட்டுள்ளனர்.
இந்நிலையில் வட கிழக்கு பருவ மழை தீவிரமடைந்து வருவதால், கடலுார் மாவட்டத்தில் பள்ளி, கல்லுாரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. தொடர்ந்து செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சிவகங்கை, விழுப்புரம், தஞ்சை, கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை, திருவாரூர், திருவள்ளூர், ராணிபேட்டை என ஓன்பது மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கும் இன்று (அக்.22) விடுமுறை அளித்து மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
சென்னை, புதுக்கோட்டை, சேலம், பெரம்பலூர், நாமக்கல், திருப்பூர், கரூர் மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் இன்று (அக்.22) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி மற்றும் காரைக்காலிலும் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது