UPDATED : ஜூன் 28, 2011 12:00 AM
ADDED : ஜூன் 28, 2011 10:15 AM
திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியம் விரகனூரில், 110 ஆண்டுகள் பழமை வாய்ந்த, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, இந்த ஆண்டு அரசு உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது.
இந்த பள்ளியை உயர்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்த வேண்டும் என தினமலர் செய்தி வெளியிட்டது. இதனை தொடர்ந்து தரம் உயர்த்தப்பட்டு, நேற்று முதல் அங்கு ஒன்பது மற்றும் 10ம் வகுப்பு சேர்க்கை துவங்கியது.
ஒன்றிய கவுன்சிலர் ராமகிருஷ்ணன் கூறுகையில், 1902ல் துவங்கப்பட்ட இந்த பள்ளி தரம் உயர்த்தப்பட்டதால், விரகனூரை சுற்றியுள்ள 10க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த மாணவர்கள் பயன் பெறுவர். கட்டடம் கட்ட அரசு ரூ. 60 லட்சம் ஒதுக்கியுள்ளது என்றார்.
திருப்பரங்குன்றம் அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்
மல்லிகா தலைமையில் மாணவர்கள் சேர்க்கை துவங்கியது.
