UPDATED : ஜூலை 07, 2011 12:00 AM
ADDED : ஜூலை 07, 2011 12:03 PM
அ நிறம் | அளவு
இன்று காலை 9 மணியளவில் காது கேளாதோருக்கான கலந்தாய்வும், 10 மணியளவில் கண் பார்வையற்றோருக்கான கலந்தாய்வும், 12 மற்றும் 3 மணிக்கு கை, கால் ஊனமுற்றவர்களுக்கான கலந்தாய்வும் நடைபெறுகிறது.
தமிழகத்தில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் மற்றும் சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான மாணவ சேர்க்கையை அண்ணா பல்கலைக்கழகம் கலந்தாய்வு மூலம் நடத்துகிறது.
அதன்படி, ஜுன் 30ம் தேதி விளையாட்டு வீரர்களுக்கான கலந்தாய்வும், ஜுலை 1ஆம் தேதி முதல் 6ம் தேதி வரை தொழிற்பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வும் நடைபெற்று முடிந்தது.
இன்று மாற்றுத் திறனாளிகளுக்கான கலந்தாய்வு நடைபெற்று வருகிறது. ஜுலை 8ம் தேதி முதல் பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வு துவங்க உள்ளது.
