UPDATED : ஜூலை 27, 2011 12:00 AM
ADDED : ஜூலை 27, 2011 02:53 PM
கல்லூரி வாசல்களில் திரண்ட கல்லூரி மாணவ, மாணவியர், தமிழகத்தில் லட்சக்கணக்கான மாணவர்களின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு உடனடியாக சமச்சீர் கல்வியை தமிழக அரசு கொண்டு வர வேண்டும் கோஷமிட்டனர். சமச்சீர் கல்வியை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு உச்ச நிதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளது. தமிழக அரசின் மேல் முறையீட்டு மனு மீதான விசாரணை ஜுலை 26ம் தேதி துவங்கியது. முதல் நாள் விசாரணையின் போது, தமிழக அரசு சார்பில், இந்த கல்வியாண்டில் சமச்சீர் கல்வியை கொண்டு வர முடியாது என்று வாதம் முன்வைக்கப்பட்டுள்ளது. இன்றும் வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், கட்சி மற்றும் மாணவ அமைப்புகள் சார்பில் சமச்சீர் கல்வியை நடைமுறைப்படுத்தக் கோரி போராட்டங்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
