sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 09, 2025 ,புரட்டாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

மாணவர்களின் கல்விக் கட்டணம் உத்தரவை ரத்து செய்தது ஐகோர்ட்

/

மாணவர்களின் கல்விக் கட்டணம் உத்தரவை ரத்து செய்தது ஐகோர்ட்

மாணவர்களின் கல்விக் கட்டணம் உத்தரவை ரத்து செய்தது ஐகோர்ட்

மாணவர்களின் கல்விக் கட்டணம் உத்தரவை ரத்து செய்தது ஐகோர்ட்


UPDATED : செப் 09, 2008 12:00 AM

ADDED : ஜன 01, 1970 05:30 AM

Google News

UPDATED : செப் 09, 2008 12:00 AM ADDED : ஜன 01, 1970 05:30 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

இணைப்புக் கட்டணம், காப்புக் கட்டணம் உயர்த்தியது செல்லும் எனவும் உத்தரவிட்டது.
புதுச்சேரியில் உள்ள பி.எட்., கல்லூரிகள் செலுத்த வேண்டிய இணைப்புக் கட்டணத்தை ரூ.50 ஆயிரத்தில் இருந்து ஐந்து லட்சமாகவும், வைப்புத் தொகையை ரூ.10 லட்சத்தில் இருந்து ரூ.25 லட்சமாகவும் உயர்த்தி புதுச்சேரி பல்கலைக்கழகம் 2005ம் ஆண்டு உத்தரவிட்டது.
மேலும், மாணவர்களின் கல்விக் கட்டணத்தில் இருந்து 5 சதவீத தொகையை பல்கலைக்கழகத்துக்குச் செலுத்த வேண்டும் என்றும் பல்கலைக்கழகத்துக்கு எதிராக வழக்கு தொடுத்தால் சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்கள் வழக்கு செலவுத் தொகை வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது.
இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் விவேகானந்தா கல்வி நிறுவனம், லயோலா கல்வி நிறுவனம் உட்பட பல நிறுவனங்கள் மனுக்கள் தாக்கல் செய்தன. பல்கலைக்கழகத்தின் இணைப்பு பெறுவதற்கு முன்பாக மாணவர்களைச் சேர்த்த ஒரு கல்லூரிக்கு அபராதம் விதிக்கப்பட்டதை எதிர்த்தும் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.
இம்மனுக்களை நீதிபதி என்.பால்வசந்தகுமார் விசாரித்தார். கல்வி நிறுவனங்கள் சார்பில் சீனியர் வக்கீல் மாசிலாமணி, ஆர்.சுரேஷ்குமார், சீனியர் வக்கீல் கே.துரைசாமி உள்ளிட்ட வக்கீல்கள் ஆஜராயினர். புதுச்சேரி பல்கலைக்கழகம் சார்பில் சீனியர் வக்கீல் விடுதலை ஆஜரானார்.
நீதிபதி பால்வசந்தகுமார் பிறப்பித்த உத்தரவு:
பாடத் திட்டங்களை வகுக்கவும், தேர்வுகளை நடத்தவும், கல்வி நிறுவனங்களை ஆய்வு செய்யவும், பல்கலைக்கழகத்துக்கு அதிகம் செலவாகிறது. எனவே கட்டணங்களை உயர்த்தி புதுச்சேரி பல்கலைக்கழகம் பிறப்பித்த உத்தரவில் தவறில்லை.
வைப்புத் தொகையை உயர்த்துவது, சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனத்தின் நிதி ஆதாரத்தை உறுதி செய்வதாகும். அவசர காலத்துக்கு இந்தத் தொகையை செலவழிக்கலாம். கல்வி நிறுவனம் மற்றும் மாணவர்களின் நலன் கருதியே இந்தத் தொகை உயர்த்தப்பட்டிருப்பதாகக் கருத வேண்டும். இதனால் பல்கலைக்கழகத்துக்கு எந்தப் பலனும் இல்லை. ஆகையால் இது செல்லும்.
பல்கலைக்கழகம் ஒரு சட்டப்பூர்வமான அமைப்பு என்பதால் இணைப்புக் கட்டணம், வைப்புத் தொகை நிர்ணயிக்க அதற்கு அதிகாரம் உள்ளது. ஆனால், மாணவர்களின் கல்விக் கட்டணத்தில் இருந்து ஐந்து சதவீத தொகையை செலுத்த வேண்டும் எனக் கோருவதில் நியாயமில்லை.
மேலும், வழக்குக்கு ஆகும் செலவை சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்கள் தர வேண்டும் என கோருவதிலும் நியாயமில்லை. ஏனென்றால், செலவை சரிசெய்வதற்காக ஏற்கெனவே இணைப்புக் கட்டணத்தை பல்கலைக் கழகம் உயர்த்தியுள்ளது.
பல்கலைக் கழகத்தின் இணைப்பு பெறுவதற்கு முன்பாக மாணவர்களை சேர்த்த கல்வி நிறுவனத்திடம் இருந்து அபராதத் தொகை வசூலிப்பது சரிதான். இவ்வாறு நீதிபதி பால்வசந்தகுமார் உத்தரவிட்டுள்ளார்.






      Dinamalar
      Follow us