UPDATED : ஜன 24, 2012 12:00 AM
ADDED : ஜன 24, 2012 10:39 AM
அ நிறம் | அளவு
சிறந்த தமிழ் நூல்களுக்கான நிதி உதவியை 50 ஆயிரமாக உயர்த்தி முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது:
சிறந்த நூல்களுக்காக வழங்கப்பட்டு வரும் நிதியுதவி குறைவாக உள்ளது. பெரும்பாலான நூலாசிரியர்கள் இந்ததிட்டத்தில் விண்ணப்பிக்க முடியாத நிலை உள்ளது.
இதை கருத்தில் கொண்டு தமிழில் சிறந்த நூல்களுக்கான வழங்கப்படும் நிதியுதவியை 25 ஆயிரம் ரூபாயிலிருந்து 50 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
இந்த திட்டத்தின் மூலம் நிதியுதவி பெற நிர்ணயம் செய்யப்பட்டுள்ள விண்ணப்பதாரர்களின் சம்பள வரம்பு 25 ஆயிரம் ரூபாயிலிருந்து 50 ஆயிரம் ரூபாயாக உயர்த்தவும் முதல்வர் உத்தரவிட்டுள்ளதாக செய்தியில் கூறப்பட்டுள்ளது.
