தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/விவசாயிகளுக்கு பாதி கட்டணத்தில் அஞ்சல்வழி படிப்பு

விவசாயிகளுக்கு பாதி கட்டணத்தில் அஞ்சல்வழி படிப்பு

விவசாயிகளுக்கு பாதி கட்டணத்தில் அஞ்சல்வழி படிப்பு


UPDATED : ஜன 25, 2012 12:00 AM

ADDED : ஜன 25, 2012 12:18 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜன 25, 2012 12:00 AM ADDED : ஜன 25, 2012 12:18 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை: கோவை விவசாய பல்கலை, விவசாயிகளுக்கு அஞ்சல் வழியில், 50 சதவீத கல்வி கட்டணத்தில் இளநிலை பண்ணை தொழில் நுட்ப பாடத்திட்டத்தை துவக்கியுள்ளதாக, துணைவேந்தர் முருகேசபூபதி தெரிவித்தார்.

அவரது அறிக்கை: அரசின், உழவர் தின பரிசாக இப்புதிய படிப்பின் 2ம் ஆண்டு சேர்க்கை, ஜன.,15 முதல் துவங்கியுள்ளது. இதில் சேர, விவசாயிகள் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்று, 27வயது பூர்த்தியாகியிருக்க வேண்டும். விண்ணப்பத்தை விவசாய பல்கலையின் கீழ் இயங்கும் கல்லூரி, ஆராய்ச்சி நிலையம், விவசாய அறிவியல் நிலையங்களில் 100 ரூபாயை செலுத்தி பெறலாம் அல்லது இயக்குனர், தமிழ்நாடு விவசாய பல்கலை, கோவை என்ற முகவரிக்கு, ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா பல்கலை கிளையில் பெறத்தக்க வகையில் டி.டி., எடுத்து அனுப்பலாம்.

மேலும் விபரங்களுக்கு, 94421 11058, 48 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us