தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/சம்பள முரண்பாட்டை நீக்க சிறப்பாசிரியர்கள் வலியுறுத்தல்

சம்பள முரண்பாட்டை நீக்க சிறப்பாசிரியர்கள் வலியுறுத்தல்

சம்பள முரண்பாட்டை நீக்க சிறப்பாசிரியர்கள் வலியுறுத்தல்


UPDATED : பிப் 03, 2013 12:00 AM

ADDED : பிப் 03, 2013 06:11 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : பிப் 03, 2013 12:00 AM ADDED : பிப் 03, 2013 06:11 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சங்க பொதுச்செயலர் மாணிக்கம் உள்ளிட்ட நிர்வாகிகள், நேற்று, நிருபர்களிடம் கூறியதாவது:கடந்த, 1988, ஜூன் 1 வரை, அரசு ஆரம்பப் பள்ளி தலைமை ஆசிரியரும், உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் இடைநிலை மற்றும் சிறப்பாசிரியர்களும், ஒரே சம்பளத்தை பெற்று வந்தனர். 

அனைவரும் ஒரே கல்வித் தகுதியை பெற்றிருக்கின்றனர். மத்திய அரசு அமைத்த, ஐந்தாவது ஊதியக் குழு அமலுக்கு வந்த போது, ஆரம்பப் பள்ளி தலைமை ஆசிரியர்களின் சம்பளம் மட்டும் மாறியது.

உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் இடைநிலை, சிறப்பாசிரியர் சம்பள விகிதத்தில், இதுவரை எந்த மாற்றமும் செய்யவில்லை. இந்த முரண்பாட்டை நீக்க வேண்டும் என, தெரிவித்து, 1993ல், தமிழக அரசு, அரசாணை 216ஐ வெளியிட்டது. 

அரசு உத்தரவிட்டும், கல்வித் துறை மட்டும் அசைந்து கொடுக்காமல் உள்ளது. 216 அரசாணையை அமல்படுத்தக் கோரி, 4ம் தேதி, சென்னை, எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் இருந்து, கோட்டை நோக்கி, கவன ஈர்ப்பு பேரணி நடத்த உள்ளோம்.இவ்வாறு, நிர்வாகிகள் கூறினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us