UPDATED : ஜூலை 26, 2013 12:00 AM
ADDED : ஜூலை 26, 2013 08:03 AM
அ நிறம் | அளவு
விருதுநகர்: பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு, இந்தாண்டு முதல் ஊக்க ஊதியம் வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது.
ஆசிரியர்கள் 10 ஆண்டுகள் பணியாற்றினால் தேர்வு நிலை, 20 ஆண்டுகள் பணியாற்றினால் சிறப்பு நிலை வழங்கப்படும். தேர்வு நிலை, சிறப்பு நிலை பெறும் போது, அடிப்படை சம்பளத்தில் 3 சதவீதம் உயர்த்தி வழங்க, 2007 ல் மூன்று நபர் குழு உத்தரவிட்டிருந்தது.
ஊக்க ஊதியம் 2007 ல் உயர்த்தப்பட்டிருந்தாலும், 2013 ல் இருந்து வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது. ஆசிரியர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
