sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 09, 2025 ,புரட்டாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

பொறியியல் மாணவர்களையும் தொற்றிக்கொண்ட வன்முறைக் கலாச்சாரம்

/

பொறியியல் மாணவர்களையும் தொற்றிக்கொண்ட வன்முறைக் கலாச்சாரம்

பொறியியல் மாணவர்களையும் தொற்றிக்கொண்ட வன்முறைக் கலாச்சாரம்

பொறியியல் மாணவர்களையும் தொற்றிக்கொண்ட வன்முறைக் கலாச்சாரம்


UPDATED : ஆக 03, 2013 12:00 AM

ADDED : ஆக 03, 2013 10:58 AM

Google News

UPDATED : ஆக 03, 2013 12:00 AM ADDED : ஆக 03, 2013 10:58 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செம்­மஞ்­சேரி: செம்­மஞ்­சே­ரியில் உள்ள தனியார் பொறி­யியல் கல்லூ­ரியில், நான்காம் மற்றும் மூன்றாம் ஆண்டு மாண­வர்­க­ளி­டையே, கடும் மோதல் ஏற்­பட்­டது. இதில், 50க்கும் மேற்­பட்ட மாண­வர்கள் காயம் அடைந்­தனர்.

செம்­மஞ்­சேரி, ராஜிவ் காந்தி சாலையில் உள்ள தனியார் பொறி­யியல் கல்­லூ­ரியில், இரண்­டா­யி­ரத்­திற்­கும் மேற்­பட்ட மாண­வர்கள் படித்து வரு­கின்­றனர். நேற்று முன் தினம், மூன்றாம் ஆண்டு மாண­வர்கள் சிலர், நான்காம் ஆண்டு மாண­வர்கள் சிலரை தாக்­கி ­உள்­ளனர்.

இதனால் ஆத்­திரம் அடைந்த, நான்காம் ஆண்டு மாண­வர்கள், நேற்று காலை முதல் கல்­லூ­ரியில் உள்ள, உணவு விடுதி, வகுப்­ப­றைகள் என, மூன்றாம் ஆண்டு மாணவர்கள் இருந்த அனைத்து இடங்க­ளுக்கும் சென்று, அவர்­களை, உருட்டு கட்டைகளால் தாக்­கி­யுள்­ளனர்.

பதி­லுக்கு, மூன்றாம் ஆண்டு மாண­வர்­களும், கற்­களை கொண்டு வீசினர். இந்த மோதலில், 50க்கும் மேற்­பட்ட மாண­வர்கள் காய­ம­டைந்­தனர். கல்­லூரி உண­வகம், வகுப்­ப­றை­களும் சேத­ம­டைந்­தன.

இதை தொடர்ந்து, கல்­லூரி நிர்­வாகம் மற்றும் செம்­மஞ்­சேரி போலீசார், நான்காம் ஆண்டு மாண­வர்­க­ளிடம் பேச்சு வார்த்தை நடத்­தினர். இதில், மூன்றாம் ஆண்டு மாண­வர்­களை கைது செய்ய வேண்டும் என, அவர்கள் கோரிக்கை வைத்­தனர்.

பின்னர், இந்த கோரிக்­கையை வலி­யு­றுத்தி, 500க்கும் மேற்­பட்ட நான்காம் ஆண்டு மாண­வர்கள், ராஜிவ் காந்தி சாலையில், ஒன்று கூடினார். இதனால், அந்த பகு­தியில் சிறிது நேரம் பர­ப­ரப்பு ஏற்­பட்­டது. இதை தொடர்ந்து, கல்­லூரி நிர்­வாகம், கல்­லூரி பேருந்­துகள் மூலம், மாண­வர்­களை அங்­கி­ருந்து அழைத்து சென்­றது. இது குறித்து, போலீசில் வழக்கு பதிவு செய்­யப்­ப­ட­வில்லை.

மாண­வர்கள் மோதலை அடுத்து, கல்­லூ­ரிக்கு விடு­முறை அறி­விக்­கப்­பட்டு உள்­ளது.






      Dinamalar
      Follow us