sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

சென்னை, காஞ்சிபுரம் மாவட்ட பள்ளிகளில் அமைச்சர் திடீர் ஆய்வு

/

சென்னை, காஞ்சிபுரம் மாவட்ட பள்ளிகளில் அமைச்சர் திடீர் ஆய்வு

சென்னை, காஞ்சிபுரம் மாவட்ட பள்ளிகளில் அமைச்சர் திடீர் ஆய்வு

சென்னை, காஞ்சிபுரம் மாவட்ட பள்ளிகளில் அமைச்சர் திடீர் ஆய்வு


UPDATED : ஆக 07, 2013 12:00 AM

ADDED : ஆக 07, 2013 08:31 AM

Google News

UPDATED : ஆக 07, 2013 12:00 AM ADDED : ஆக 07, 2013 08:31 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கல்வித்துறை முதன்மை செயலர் சபிதா, எஸ்.எஸ்.ஏ., இயக்குனர் மகேஸ்வரன், பள்ளிக் கல்வி இயக்குனர் ராமேஸ்வர முருகன், தொடக்க கல்வி இயக்குனர் இளங்கோவன் ஆகியோருடன், நேற்று காலை, 9:00 மணிக்கு, சென்னை, வேளச்சேரி அரசு மேல்நிலைப் பள்ளிக்கு, அமைச்சர் சென்றார். அங்கு, வழிபாட்டுக் கூட்டத்தில் பங்கேற்றார்.

பின், 8, 10 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளை எடுக்கும் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுடன், கற்றல் - கற்பித்தல் குறித்து பேசினார். மாணவரோடு மாணவராக, வகுப்பறையில் அமர்ந்து, ஆசிரியரை பாடம் எடுக்க வைத்தார். இதை சற்றும் எதிர்பாராத ஆசிரியருக்கு, ஒரு பக்கம் மகிழ்ச்சியும், மறு பக்கம் பதற்றமும் ஏற்பட்டது.

பின், நூலகம், உடற்பயிற்சி வகுப்பு உள்ளிட்டவற்றையும், அமைச்சர் பார்வையிட்டார். சென்னை, மேடவாக்கம், அரசு ஆரம்பப் பள்ளியில், திடீரென ஆசிரியராக மாறி, மாணவர்களிடம், பல்வேறு கேள்விகளை கேட்டு, உற்சாகப்படுத்தினார்.

மாணவர்களை, வாக்கியங்களை படிக்கச் சொல்லியும், எழுதச் சொல்லியும், அவர்களின் கற்றல் திறனை, அமைச்சர் ஆய்வு செய்தார். மேடவாக்கம் அருகே, ஜல்லடியன்பேட்டை அரசு நடுநிலைப் பள்ளியிலும், அமைச்சரின் கேள்விகள் தொடர்ந்தன. தமிழ் மற்றும் சமூகவியல் பாடங்களில், கேள்விகளை கேட்டார்.

மாணவர்கள், சரியாக பதிலளித்ததைக் கண்டு, அமைச்சர் மற்றும் அதிகாரிகள் குழு, மகிழ்ச்சி அடைந்தது. இறுதியில், தாம்பரம், ஜெயகோபால் கரோடியா தேசிய மேல்நிலைப் பள்ளியில், காஞ்சிபுரம் மாவட்ட உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கூட்டம் நடந்தது.

இதில், மாவட்ட அளவில், அரசு நலத்திட்ட உதவிகள், மாணவர்களுக்கு, எந்த அளவிற்கு சென்றடைந்தது என்பது குறித்து, ஆய்வு செய்த அமைச்சர், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வில், தேர்ச்சி சதவீதத்தை அதிகரிக்க வேண்டும் என, கேட்டுக்கொண்டார்.

அரசியலில் நுழைவதற்கு முன், வைகைச் செல்வன், பல ஆண்டுகளாக, சென்னை, பாரிமுனையில் உள்ள முத்தியால்பேட்டை மேல்நிலைப் பள்ளியில் (அரசு நிதியுதவி பெறும் பள்ளி), தமிழ் ஆசிரியராக வேலை பார்த்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.






      Dinamalar
      Follow us