பொதுத்தேர்வில் வெற்றி பெற்ற கைதிகளுக்கு கல்வி சான்றிதழ்
பொதுத்தேர்வில் வெற்றி பெற்ற கைதிகளுக்கு கல்வி சான்றிதழ்
UPDATED : நவ 16, 2013 12:00 AM
ADDED : நவ 16, 2013 09:33 AM
கோவை: கோவை மத்திய சிறையில், பொதுத்தேர்வில் வெற்றி பெற்ற கைதிகள் கல்விச் சான்றிதழ் வழங்கி பாராட்டப்பட்டனர்.
கோவை மத்திய சிறையில், 2012-13 கல்வியாண்டில் நடந்த பொதுத் தேர்வில் வெற்றி பெற்ற கைதிகளுக்கு, சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி சிறை வளாகத்தில் நேற்று முன்தினம் நடந்தது. கோவை சரக சிறைத்துறை டி.ஜ.ஜி., கோவிந்தராஜன் தலைமை வகித்தார். எட்டாம் வகுப்பில் 17 கைதிகள், 10ம் வகுப்பில் 13 கைதிகள் பிளஸ் 2வில், ஏழு கைதிகள் தேர்வு எழுதினர்.
பொதுத் தேர்வில் தேர்ச்சி பெற்ற கைதிகளுக்கு, சான்றிதழ்களும், 10ம் வகுப்பு, பிளஸ் 2 தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற கைதிகளுக்கு கழற்கேடயமும் பரிசாக வழங்கப்பட்டது. மேலும், சிறையிலுள்ள தொழிற்கூட பிரிவுகளில் சிறப்பாக பணியாற்றிய 30க்கும் மேற்பட்ட கைதிகளுக்கு நினைவு பரிசு வழங்கி ஊக்குவிக்கப்பட்டனர்.
