இந்திய கலாசாரம், பண்பாட்டை அறிய ஜெர்மனி மாணவர்கள் நெல்லை வருகை
இந்திய கலாசாரம், பண்பாட்டை அறிய ஜெர்மனி மாணவர்கள் நெல்லை வருகை
UPDATED : ஜன 21, 2009 12:00 AM
ADDED : ஜன 21, 2009 01:19 PM
பாளையங்கோட்டையில் உள்ள பெல் மெட்ரிக் பள்ளியின் அழைப்பை ஏற்று 14 மாணவ, மாணவியர் இரண்டு ஆசிரியர்களுடன் நெல்லை வந்துள்ளனர். அவர்களை பெல் பள்ளி மாணவ, மாணவியர் நெற்றியில் திலகமிட்டு வரவேற்றனர்.
நெல்லையில் எட்டு நாட்கள் தங்க திட்டமிட்டுள்ள இவர்கள் மதுரை மீனாட்சியம்மன் கோவில், கன்னியாகுமரி உள்ளிட்ட கலாசார மையங்களுக்கு சுற்றுலா செல்கின்றனர். 26ம் தேதி நெல்லையில் நடக்கும் குடியரசு தின விழாவிலும் பங்கேற்கின்றனர்.
வெளிநாட்டு மாணவர்கள் ஓட்டல்களிலோ, பள்ளியிலோ தங்குவதற்கு பதிலாக நெல்லை பள்ளியில் பயிலும் ஒவ்வொரு மாணவரின் வீட்டிலும் தங்கி தமிழக உணவு முறை, பழக்கவழக்கங்களை அறிந்துகொள்கின்றனர். இங்கு இருக்கும் நாட்களில் தமிழ் மொழியை கற்றுக்கொள்ளவும், ஜெர்மனி மொழியை கற்றுத்தரவும் இசைந்துள்ளனர். இதற்கான ஏற்பாடுகளை பள்ளி தாளாளர் ராஜேந்திர சிங், முதல்வர் ரேணுகா, ஒருங்கிணைப்பாளர் வசீகரன் செய்துள்ளனர்.
