UPDATED : ஜூன் 28, 2014 12:00 AM
ADDED : ஜூன் 28, 2014 10:29 AM
டி.என்.பி.எஸ்.சி. (அரசுப் பணியாளர் தேர்வாணையம்) உறுப்பினர் பாலசுப்ரமணியனிடம் தலைவர் பதவி கூடுதல் பொறுப்பாக ஒப்படைக்கப்பட்டுள்ளது.
தேர்வாணையத் தலைவர் பதவியில் இருந்த நவநீதகிருஷ்ணன் ராஜ்யசபா எம்.பி. தேர்தலில் போட்டியிட்டதால், டி.என்.பி.எஸ்.சி. தலைவர் பதவியை 10 நாட்களுக்கு முன் ராஜினாமா செய்தார். எனினும், தேர்வாணைய இணையதளத்தில் இருந்து நவநீதகிருஷ்ணன் புகைப்படம் மற்றும் பெயர் அகற்றப்படாமல் இருந்தது. இது குறித்து தினமலர் நாளிதழில் நேற்று செய்தி வெளியான நிலையில், தேர்வாணைய இணையதளத்தில் (www.tnpsc.gov.in) இருந்து நவநீதகிருஷ்ணன் புகைப்படம் மற்றும் பெயர் நீக்கப்பட்டது.
மேலும், தேர்வாணைய உறுப்பினர்களில் ஒருவரான பாலசுப்ரமணியன் தலைவர் பதவியை கூடுதல் பொறுப்பாக வகிப்பார் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய தலைவர் நியமிக்கப்படும் வரை தலைவர் பதவியை பாலசுப்ரமணியன் கவனிப்பார்.