தொடக்க நிலை ஆசிரியர்களுக்கான எழுதுதல், படித்தல் திறன் வளர்க்கும் பயிற்சி
தொடக்க நிலை ஆசிரியர்களுக்கான எழுதுதல், படித்தல் திறன் வளர்க்கும் பயிற்சி
UPDATED : ஆக 14, 2014 12:00 AM
ADDED : ஆக 14, 2014 12:32 PM
அ நிறம் | அளவு
அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை மேல ரத வீதி நகராட்சி நடுநிலைப் பள்ளியில், அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், தொடக்க நிலை ஆசிரியர்களுக்கான எழுதுதல் மற்றும் படித்தல் திறன்களை வளர்க்கும் பயிற்சி நடந்தது.
கூடுதல் முதன்மை கல்வி அலுவலர் பால்ராஜ், உதவி திட்ட அலுவலர் ராஜாராம் மற்றும் உதவி தொடக்க கல்வி அலுவலர்கள் பார்வையிட்டனர். பயிற்சியின் மூலம், 1 முதல் 5 வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு படித்தல் மற்றும் எழுதுதலால் ஏற்படும் குறைபாடுகளை நீக்குவதுடன், கற்றல் கற்பித்தல் நிகழ்வுகள் சிறப்பாக நடைபெற ஆலோசனைகள் வழங்கப்பட்டன.
ஆசிரியர் பயிற்றுநர்கள் பயிற்சி அளித்தனர். ஏற்பாடுகளை மேற்பார்வையாளர் சாந்தி செய்தார்.
