தேர்வில் முதலிடம் பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கும் விழா
தேர்வில் முதலிடம் பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கும் விழா
UPDATED : ஆக 19, 2014 12:00 AM
ADDED : ஆக 19, 2014 11:53 AM
அ நிறம் | அளவு
விக்கிரவாண்டி: பனையபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் தேர்வில் முதலிடம் பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கும் விழா நடந்தது.
பள்ளி வளாகத்தில் நடந்த விழாவிற்கு ஊராட்சித் தலைவர் மீனாட்சி ஆறுமுகம் தலைமை தாங்கினார். பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் பாலசுப்பிரமணியன், வங்கி தலைவர் ஜெயமூர்த்தி, ஆனந்தம் இயக்குனர் கணேசன் முன்னிலை வகித்தனர்.
தலைமை ஆசிரியர் இளஞ்செழியன் வரவேற்றார். ஊராட்சி தலைவர் மீனாட்சி ஆறுமுகம் கொடியேற்றி பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பு தேர்வில் பள்ளியில் முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி பேசினார். சார்பதிவாளர் தெய்வமணி, நல்லாசிரியர் தண்டபாணி, கிராம கல்விக்குழு புகழேந்தி, தண்டபாணி, கிருஷ்ணமூர்த்தி, தியாகராஜன் கலந்து கொண்டனர்.
