பணி பயிற்சிக்கு 40% வரை நிதி அதிகரிக்க முடிவுசெய்துள்ள மத்திய அரசு
பணி பயிற்சிக்கு 40% வரை நிதி அதிகரிக்க முடிவுசெய்துள்ள மத்திய அரசு
UPDATED : ஆக 19, 2014 12:00 AM
ADDED : ஆக 19, 2014 04:10 PM
புதுடில்லி: 1961ம் ஆண்டின் Apprentice சட்டத்தின்படி, Apprentice செயல்பாடுகளுக்கு, 40% அளவிற்கு, நிதியுதவியை அதிகப்படுத்த, மத்திய மனிதவளத்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது.
கடந்த 2011ம் ஆண்டிற்கு பிறகு, இந்த முறைதான் இந்த நிதியுதவி தொகையில் மாற்றம் கொண்டு வரப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய முழுவதும் 10 ஆயிரத்திற்கும் அதிகமான நிறுவனங்களில், ஒவ்வொரு ஆண்டும் ஏறக்குறைய 1 லட்சம் மாணவர்கள் apprentice பயிற்சி பெறுகிறார்கள். இந்த apprentice காலகட்டம் என்பது, படிப்பைப் பொறுத்து, 3 மாதங்கள் தொடங்கி, 1 ஆண்டு வரை நீண்டு செல்கிறது.
கடந்தாண்டு, மத்திய மனிதவள அமைச்சகமும், நிறுவனங்களும், இந்த பயிற்சிக்காக ரூ.383 கோடி செலவிட்டன. இந்தாண்டு, அந்த நோக்கத்திற்காக, ரூ.536 கோடி செலவிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
