தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/செப். 6, 7 தேதிகளில் புத்தாக்க அறிவியல் ஆய்வு விருதிற்கான மாநில கண்காட்சி

செப். 6, 7 தேதிகளில் புத்தாக்க அறிவியல் ஆய்வு விருதிற்கான மாநில கண்காட்சி

செப். 6, 7 தேதிகளில் புத்தாக்க அறிவியல் ஆய்வு விருதிற்கான மாநில கண்காட்சி


UPDATED : ஆக 22, 2014 12:00 AM

ADDED : ஆக 22, 2014 12:24 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 22, 2014 12:00 AM ADDED : ஆக 22, 2014 12:24 PM


Follow on Google
அ நிறம் | அளவு

திருச்சி: "பள்ளி மாணவர் களுக்கான புத்தாக்க அறிவியல் ஆய்வு விருதிற்கான மாநில கண்காட்சி, திருச்சியில் செப்.,6, 7 தேதிகளில் நடக்கிறது" என, தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மைய செயல் இயக்குனர் அய்யம்பெருமாள் தெரிவித்துள்ளார்.

அவரது சுற்றிக்கை: 2013 - 14ம் ஆண்டிற்கான புத்தாக்க அறிவியல் ஆய்வு விருதிற்காக, மாவட்ட அளவில் கண்காட்சி நடத்தப்பட்டது.

வெற்றிபெற்ற மாணவர்களின் படைப்புகள் செப்.,6, 7ல், திருச்சி ஷிவானி இன்ஜினியரிங் மற்றும் தொழில்நுட்பக்கல்லூரியில் நடைபெறும் மாநில அளவிலான கண்காட்சியில் இடம்பெற உள்ளன.

அதில் அமைச்சர்கள், கலெக்டர், பள்ளி கல்வித்துறை உயரதிகாரிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொள்கின்றனர். எனவே மாவட்ட அளவிலான போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களின் பெயர்கள், பள்ளி முகவரி, அவர்கள் படைத்த சாதனங்கள் உள்ளிட்ட விபர பட்டியலை, முதன்மைக்கல்வி அதிகாரிகள் மெயிலில் உடனடியாக அனுப்பி வைக்க வேண்டும்.

கலந்துகொள்ள வரும் மாணவர்கள், பள்ளி தலைமையாசிரியரின் கையொப்பமிட்ட சான்றுடன் வருவது அவசியம். தேர்ந்தெடுக்கப்படும் சிறந்த படைப்புகளுக்கு பரிசு வழங்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us