UPDATED : ஆக 28, 2014 12:00 AM
ADDED : ஆக 28, 2014 10:43 AM
அ நிறம் | அளவு
சென்னை: பள்ளிக்கல்வித் துறையில், 12 ஆயிரம் புதிய ஆசிரியர்களுக்கு, பணி நியமனம் வழங்கும் நிகழ்ச்சியை துவக்கி வைக்கும் விதமாக, முதல்வர் ஜெயலலிதா இன்று தலைமைச் செயலகத்தில், சில பேருக்கு பணி நியமன உத்தரவை வழங்குகிறார்.
பட்டதாரி ஆசிரியரில் சிலருக்கும், முதுகலை ஆசிரியரில் சிலருக்கும், முதல்வர், பணி நியமன உத்தரவை வழங்குவார் என, எதிர்பார்க்கப்படுகிறது.
பின் பள்ளிக்கல்வித் துறை, கலந்தாய்வு மூலம் 12 ஆயிரம் பேருக்கும் பணி நியமன உத்தரவை வழங்க உள்ளது. இதுகுறித்த கலந்தாய்வு அட்டவணையும் இன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
