கால்பந்து போட்டியில் ஜேப்பியார் பொறியியல் கல்லுாரி அணி சாம்பியன்
கால்பந்து போட்டியில் ஜேப்பியார் பொறியியல் கல்லுாரி அணி சாம்பியன்
UPDATED : ஆக 28, 2014 12:00 AM
ADDED : ஆக 28, 2014 10:51 AM
அ நிறம் | அளவு
பெருங்களத்துார்: அகில இந்திய அளவிலான, கல்லுாரிகளுக்கு இடையிலான கால்பந்து போட்டியில், ஜேப்பியார் பொறியியல் கல்லுாரி அணி சாம்பியன் பட்டம் பெற்றது.
எஸ்.ஆர்.எம்., பல்கலை சார்பில், அகில இந்திய அளவிலான, கல்லுாரி அணிகள் பங்கேற்ற கால்பந்து போட்டி நடந்தது. லீக் சுற்று போட்டிகளில், ஜேப்பியார் பொறியியல் கல்லுாரி அணி 8-0 என்ற கோல் கணக்கில், கிரசண்ட் பல்கலை அணியை வீழ்த்தியது.
மற்றொரு போட்டியில், ஜேப்பியார் அணி 1-0 என சத்யபாமா அணியை வென்றது. எஸ்.ஆர்.எம். பல்கலை அணியுடன் மோதிய ஆட்டத்தில் 0-1 என, ஜேப்பியார் அணி தோல்வி அடைந்தது. லீக் சுற்று முடிவுகளின்படி, ஜேப்பியார் அணி, சாம்பியன் பட்டத்தை வென்றது. அந்த அணிக்கு கோப்பை மற்றும் பரிசுத்தொகை வழங்கப்பட்டது.
