மருந்துவம் சார் பட்டப் படிப்பு கலந்தாய்வு - இன்னும் 2,317 இடங்கள் காலி
மருந்துவம் சார் பட்டப் படிப்பு கலந்தாய்வு - இன்னும் 2,317 இடங்கள் காலி
UPDATED : ஆக 28, 2014 12:00 AM
ADDED : ஆக 28, 2014 02:13 PM
அ நிறம் | அளவு
இவை, இரண்டாம் கட்ட கலந்தாய்வில் நிரப்பப்படும் என மருத்துவக் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில், பி.எஸ்.சி., நர்சிங்., பி.பார்ம் உள்ளிட்ட, எட்டு விதமாக, மருத்துவம் சார்ந்த பட்டப் படிப்புகள் உள்ளன.
ஐந்து அரசுக் கல்லூரிகள், 197 தனியார் கல்லூரிகளிலும், 7,008 இடங்கள் இருந்தன. இதற்கான கலந்தாய்வு, ஆக., 19ம் தேதி துவங்கியது. நிறைவு நாளான நேற்று, 617 பேர் இட ஒதுக்கீடு பெற்றனர். மொத்தம், 4,691 பேர் வரை இடம் பெற்றனர். முதற்கட்ட கலந்தாய்வு நிறைவில், 2,317 இடங்கள் நிரப்பப்படாமல் காலியாக உள்ளன.
மாணவர் சேர்க்கை செயலர் சுகுமார் கூறுகையில், "இரண்டாம் கட்ட கலந்தாய்வு, செப்., மூன்றாம் வாரத்தில் நடத்தப்பட்டு, காலி இடங்கள் நிரப்பப்படும்" என்றார்.
