அரசு பள்ளியில் அடிப்படை வசதிகள் இல்லாததால் மாணவர்கள் அவதி
அரசு பள்ளியில் அடிப்படை வசதிகள் இல்லாததால் மாணவர்கள் அவதி
UPDATED : செப் 02, 2014 12:00 AM
ADDED : செப் 02, 2014 12:22 PM
அ நிறம் | அளவு
திருமழிசை: திருமழிசையில் உள்ள அரசு பள்ளியில் அடிப்படை வசதிகள் இல்லாததால், மாணவர்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
திருமழிசையில் உள்ள சுந்தரம் அரசு மேல்நிலைப் பள்ளியில், மாணவர்கள் குடிநீர் வசதி இல்லாமல் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும், குடிநீர் மற்றும் கழிப்பறை வசதி சரியில்லாததால், மாணவர்கள் அருகில் உள்ள வயல்வெளிகளுக்கு சென்று மதிய உணவு அருந்துகின்றனர்.
மேலும், அங்குள்ள கிணறுகளில் அமைக்கப்பட்டுள்ள குழாய்களில் ஆபத்தான முறையில் தண்ணீர் குடிக்க செல்கின்றனர். எனவே, பள்ளி மாணவர்களின் நலன் கருதி, ஏதேனும் அசம்பாவிதம் நிகழும் முன்பு பள்ளியில், குடிநீர் மற்றும் கழிப்பறை வசதி செய்து தர வேண்டும் என, மாணவர்களின் பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
